அத்தியாயம் 15

2 0 0
                                    

மதி கூறியது போல செய்யத் தொடங்கினர். ஆதியின் இன்னொரு கம்பெனியான சாப்ட்வேர் கம்பெனியை ஹரியும் திவ்யாவும் கவனிக்க ஆதியும் மதியும் பட வேலைகளை முழுமையாக கவனித்தனர்.

இதற்கு மதிக்கு துணையாக மதியுடன் தில்லைநாயகத்திடம் வேலை பார்த்த சில நண்பர்களும் மதிக்கு எப்போதும் துணையாய் நிற்கும் மற்றொரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் கௌதமும் வந்தனர். கௌதம் தான் தில்லைநாயகத்தின் போக்குகளை ஆதிக்கும் மதிக்கும் அடிக்கடி சொன்னது. அவன் தான் தில்லைநாயகத்தின் முதன்மை AD.

மதி சொன்னது போல யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சினிமாவின் கண்களுக்கு புலப்படாத திறமைசாலிகளைத் தேடும் வேட்டையில் இரவு பகலாக மும்முரமாக இருந்தனர், ஆதி, மதி, கௌதம் மற்றும் குழுவினர். ஒரு வழியாக ஓரளவு நபர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

பெருமூச்சுடன்,”கௌதம் அண்ணா.. இங்க பாரு.. நாம எடுத்த இந்த லிஸ்ட்ல உள்ளவங்களுக்கு நம்மள பத்தின டீடெய்ல்ஸ் அப்பறம் அப்படியே அவங்களோட Port-folio அனுப்ப சொல்லி மெயில் பண்ணிடு.. மறந்துடாத சரியா…? இந்தா லிஸ்ட் உனக்கு ஆதி.. அண்ட் இது எனக்கு…மேக்ஸிமம் ஒரு வாரத்துல Port-folios பார்த்து நாம ஒரு முடிவுக்கு வந்துடலாம்… நம்ம டீம் ஓரளவு செட் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்.” என்றாள் மதி.

“மதி… இது எந்த அளவு ஒர்க் அவுட் ஆகும்ன்னு எனக்கு தெரியல டா… coz, நாம மெயில் அனுப்பிடுறோம்ன்னு வை.. அதை அவனுங்க என்னைக்கு பார்த்து என்னைக்கு Port-folios அனுப்பி அதை நாம என்னைக்கு examine பண்ணி.. அப்பறம் select பண்ணி… அவனுங்களை டெஸ்ட் ஷூட்டுக்கு வர சொல்லி… It’s a long process டா… அண்ட் நம்ம மூவி ஒர்க் ஸ்டார்ட் பண்ணி ரெஜிஸ்டர் பன்னுற வரை அந்த விஷ்ணு என்ன வேனா பன்னலாம்… அப்படியே எதும் நடக்கலனாலும், அவங்களை மாதிரி இவனுங்களையும் அவன் விலை கொடுத்து வாங்க மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு…” என்றான் கௌதம்.

சாத்திரங்கள் சொல்லுதடி..!!Where stories live. Discover now