💚 இறைவனின் முடிச்சு...💚
கோவையிலிருந்து சென்னையை நோக்கி புறப்பட தயாராக இருந்த இரயிலில்.....
"""பயணிகளின் கனிவான கவனத்திற்கு..""""
என்ற அறிவிப்பு..மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் வந்த வண்ணம் இருந்தது....
இரயில்...மெதுவாக நகர தொடங்கியதும் வேகமாக
ஓடி வந்து ஏறினான் கதிர்.....தான் ரிசர்வ் செய்த கூபே கம்பார்ட்மென்ட் எங்கே என..
தேடிய படி நகர்ந்து சென்றான்...சரியான தூக்கமின்மையால் விழிகள் சிவந்து இருந்தன...
கலைந்த கேசம்.. இறுகிய முகம்...மிகவும் சோர்வாக...
காணப்பட்டான்....தன் கம்பார்ட்மென்ட்டை தேடி
சென்ற போது....நான்கு கேபின் தள்ளி ஒரு பெரியவர்...இது நான் ரிசர்வ் செய்த சீட் மா... உன்னோட சீட் எதுன்னு பாத்து உக்காருமா... என்று சத்தமாக...
ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தார்...அந்த பெண் பதிலேதும் சொல்லாமல் தன் பையை எடுத்து கொண்டு...இரு பக்கமும் பார்வையால் துளாவிய படி...
கூபே கம்பார்ட்மென்ட்டில் காலியாக இருந்த சீட் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டாள்...
அது கூபே கம்பார்ட்மென்ட் என்றோ.!! அதில் இருவர் தான் பயணம் செய்ய முடியும் என்பதோ...!! அவள் கருத்தில் பதிந்தது போல தெரிய வில்லை..
அந்த கம்பார்ட்மென்ட்டில் மற்றொரு சீட் கதிருடையது....
ஆனால் அவன் அந்த சீட்டில் அமராமல்..லக்கேஜ்களை சீட் அடியில் வைத்து விட்டு..
தன் அப்பர் பெர்த்தில்...ஏறி
அமைதியாக படுத்து விட்டான்....