💙💚இறைவனின் முடிச்சு...💚💙
K💞M
அந்த மருத்துவனை வார்டில் வேகமாக நுழைந்தவன்...
டாக்டர்....லட்சுமி அம்மாவை பரிசோதித்து கொண்டிருப்பதை அறிந்து வெளியே காத்திருந்தான்..
டாக்டர் பரிசோதித்து விட்டு அருகே இருந்த நர்சிடம் ஏதோ
சொல்லியவாறு வாசலுக்கு வந்தவர்...கதிரை ஏறிட்டு.. நீங்க sir என்றார் கேள்வி குறியோடு...
அவங்க பையன் sir..
Ok fine.. அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க.. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்...என்றார்.
டாக்டர்.. அம்மாவுக்கு என்ன? பிரச்சனை..
Blood Pressure...மன உளைச்சல்லயே இருந்து இருக்காங்க போல... அதுல
சரியா சாப்பிடாம.. தூங்காம இருந்து அதுல வந்த மயக்கம் தான்...டாக்டர்.!!??வேற எதும் பிரச்சனை இல்லையே...
ஒண்ணும் பிரச்சனை இல்ல பயப்படாதீங்க..Careful -a பாத்துக்கோங்க.. என்றவர் அங்கிருந்து அகன்றார்..
கண்கள் கலங்க லட்சுமி அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து... அவர் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான்...
கதிர்!!
அம்மாவுக்கு ஒண்ணும் இல்லப்பா பயப்படாத.. என்றார்..அவனின் கண்களை துடைத்து விட்டவர்... நெற்றியில் முத்தமிட்டார்..
அம்மா.....உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்லப்பா...
ஏன்..மா இப்டி எல்லாம் பேசுறீங்க அதெல்லாம் ஒண்ணும் இல்ல..
மாமா எங்கேம்மா...கவுண்டர்ல
பில் கட்ட போய் இருக்கான்ப்பா..