10 பாட்டி வழியில் பெயரன்
தான் நினைத்ததை சாதித்து விட்டதாக எண்ணி இறுமாந்து போனார் நந்தினி தேவி. ராஜ பரம்பரையின் வாரிசை தனது மருமகளாக கொண்டு வரும் அவருடைய விருப்பத்திற்கு இனி எந்த தடையும் இருக்காது என்று எண்ணினார்.
ஆனால்...
தஞ்சாவூர்
விக்ரமுக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர், அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் என்று எண்ணி. தன் தலையை உயர்த்திய விக்ரம்,
"நான் எதுக்காக இவங்க சொன்னதை நம்பணும்?" என்றான்.
"நீ என்ன சொல்ல வர?"
"இந்த அட்ரஸை எனக்கு கொடுத்தது என்னோட பாட்டி. ஒருவேளை இது எல்லாமே அவங்க ஏற்பாடு பண்ண நாடகமா இருந்தா?"
சுதாகரின் முகம் பளபளத்தது. அவனும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
"இது நாடகமா, இல்லையான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?" என்றான் சுதாகர்.
"செக் பண்ணி பார்த்துடலாம்"
"எப்படி? "
"வா " எழுந்து நின்றான் விக்ரம்.
"எங்க போற?" என்றபடி அவனை பின்தொடர்ந்தான் சுதாகர்.
"ஒருவேளை, பொம்மி யார் கூடவாவது ஓடிப்போய் இருந்தா, அதைப் பத்தி நிச்சயம் இந்த ஏரியா காரங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..."
"அது மட்டும் இல்ல. அவ ஓடிப்போனதால தான் அவங்க அம்மா செத்துப் போனதா சொல்றாங்க. அப்படின்னா, நிச்சயம் இங்க இருக்கிற ஜனங்க அதை பத்தி பேசி இருப்பாங்க" என்றான் சுதாகர் உற்சாகமாக.
"அதே தான்... வா, இன்னும் கொஞ்சம் பேரை விசாரிச்சு பார்க்கலாம்"
சற்று தூரத்தில் ஒரு டீக்கடை இருந்ததை அவர்கள் கண்டார்கள். சில பேர் அங்கு அமர்ந்து, செய்தித்தாளை படித்தபடி, தேநீர் பருகிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
"விக்கி, அவங்களைப் பத்தி விசாரிக்க இதைவிட பெஸ்ட் பிளேஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது." என்றான் அந்த டீக்கடையை சுட்டிக்காட்டி சுதாகர்.
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...