22 உரிமை...?
வைஷாலியை உள்ளே அழைத்து வந்தான் விக்ரம்.
"மாம்... இங்க பாருங்க, நான் வைஷாலியை கண்டுபிடிச்சிட்டேன். ஆனா, அவ நான் சொல்றதை நம்ப மாட்டேன்கிறா. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு தானே?"
அவளை நோக்கி வந்தார் சாவித்திரி.
"மை காட், என்னால நம்பவே முடியல. சின்னா சொல்றது உண்மை தான். உங்க ரெண்டு பேருக்கும் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல கல்யாணம் நடந்துது" என்றார் சாவித்திரி.
"சின்னாவா?" என்றாள் வைஷாலி முகத்தில் அதிர்ச்சியை காட்டி.
"விக்ரமை நான் சின்னான்னு தான் கூப்பிடுவேன்"
"நான் உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன். சின்னாங்கற பேரையும் நான் கேட்டிருக்கேன்." என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு வைஷாலி.
தனக்குள் எழுந்த பயத்தை விழுங்கினார் நந்தினி. காமினியோ அவரை பார்த்து முறைத்தார்.
"அப்படியா? நீ என்னோட மருமக. உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா, என்னோட மாமியார் வயசுல ரொம்ப பெரியவங்க, பக்கத்துல இருக்கிறவங்க ஆக்சிஜன் ஹாஸ்பிடலோட டீன். அவங்ககிட்ட வேணும்னா நீ கேட்டு பாரு. அவங்க உண்மையை சொல்லுவாங்க." என்றார் சாவித்திரி.
நந்தினியை நோக்கி முகத்தை திருப்பிய வைஷாலியின் கண்கள் அகலமாயின.
"நீங்களா?" நந்தினியின் திகிலடைந்த முகத்தைப் பார்த்து, தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியவாறு கேட்டாள் வைஷாலி.
"உனக்கு என்னோட பாட்டியை தெரியுமா?" என்றான் விக்ரம் தனக்கு ஒன்றும் தெரியாதது போல.
"இவங்க உங்க பாட்டியா?" என்றாள் வைஷாலி அவளுக்கும் ஒன்றும் தெரியாதது போல.
"ஆமாம்"
"இவங்க தான், எங்களை வீட்டைவிட்டு வெளியில் துரத்தி விட்டாங்க..." என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு, நந்தினியை வியர்க்க வைத்து.
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...