சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
YOU ARE READING
பாரதியார் கவிதைகள்
PoetryTHIS BOOK WILL HAVE SOME OF BHARATHIYAR'S KAVITHAIKAL WHICH I LIKE THE MOST...AND IAM STARTING THIS WITH PUDHUMAI PEN KAVIDHAI FOR WOMEN'S DAY SPECIAL