123 20 4
                                    

🍀 நெஞ்சை உருக்கிய கதை.

🍀 தலைப்பு:- இன்னும் சில நாட்கள்.....

🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.

🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....

🍀 என்ன ஆயிற்று எனக்கு?

🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது

🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

🍀 நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

🍀 என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

🍀 அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

சில....Where stories live. Discover now