🌸1🌸

5.7K 147 90
                                    

தோட்டத்தில் இருந்த பெரிய மாமரத்தில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி தாவி குதித்து ஓடிக் கொண்டிருக்க, ஆர்வமாக அதை படம் பிடித்து கொண்டிருந்தது அந்த அழகிய கயல்விழிகள்.

உதட்டுச்சாயம் இல்லாமல் இயற்கையிலேயே சிவந்திருந்த மென்மையான இதழ்களில் அழகிய இளநகை பூத்திருக்க நின்றிருந்தாள் நம் நாயகி இளநகை.

முத்துப்பல்லழகியின் ரசனையை கெடுப்பதற்கென்றே கடுகடுத்த பெண் குரல் ஒன்று இடையில் குறுக்கிட்டது.

"ஏய்... இந்தாடி இந்தப் புடவையை கட்டிக்கொண்டு ஒழுங்காக தலைவாரி பார்ப்பதற்கு சுமாராகவாவது கிளம்பி இரு. இன்னும் ஒரு மணி நேரத்தில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்!" என்று கையிலிருந்த புடவையை அவள் முன் தரையில் வீசி எறிந்து விட்டுச் சென்றாள் அக்கா சுந்தரி.

முகத்தில் எந்தவித பாவமோ, வருத்தமோ இல்லாமல் குனிந்து கீழே இருந்த புடவையை கையில் எடுத்தவள் மெல்ல அதை தடவிப் பார்த்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த தீபாவளி பண்டிகைக்காக அக்கா தனக்கென்று எடுத்துக் கொண்ட புடவை.

மெல்லிய பெருமூச்சொன்று நெஞ்சிலிருந்து வெளியேறும் நேரம் அவள் விழிகளில் சட்டென்று ஒரு ஒளி தோன்றியது.

முகத்தில் முறுவல் தோன்ற வேகமாக மீண்டும் ஜன்னலருகே சென்றவள் சுற்றும்முற்றும் விழிகளை உருட்டி விட்டு, "ஹேய்... உனக்கு ஒன்று தெரியுமா? இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்களாம் யாரென்று தெரியவில்லை. அவர்களுக்கு என்னை பிடித்திருந்தால் அடுத்து திருமணம் தான் போலிருக்கிறது. அப்பொழுது நான் வேறு வீட்டிற்கு சென்று விடுவேன் உன்னை எல்லாம் பார்க்க முடியாது பேச முடியாது!" என்று லேசான வருத்தத்தோடு இளநகை பேசிக் கொண்டிருந்தது வேறு யாரிடமும் இல்லை சாட்சாத் மாமரத்து அணில்களிடம் தான்.

ஆமாம்... அவளுடைய எண்ணங்களையும், பேச்சுக்களையும் அவள் பகிர்ந்துக் கொள்ளும் தோழர், தோழியர்களின் பட்டியல் சற்றே வித்தியாசமாக தான் இருக்கும்.

கண்ணே... கலைமானே...Onde histórias criam vida. Descubra agora