அத்தியாயம் 13

4.2K 181 20
                                    

கிருஷ்ணா லண்டனில் கம்பெனி அமைப்பதற்கு என போக வர இருந்து கொண்டிருந்தான். நாளும் பொழுதும் ஓடியது.நிரஞ்சனா அவள் குழந்தையுடன் அவள் வீடு சென்றிருந்தாள். ராதாவின் வளைகாப்பிற்கு வேலைகள் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது. ஒரு வாரம் முன்பே சமையல்காரி சுமதி ராதாவின் வீட்டுற்கு செல்ல கிளம்பினாள்.

வேணி அவளிடம்,"சூடு சுமதி, ராதா என்ன எல்லாம் கேட்கிறளோ அத்தனை செய்து கொடுக்கணும், அந்துக்கு உன்னை அங்க அனுப்புறேன்" என்றாள் சற்று கண்டிப்பு கலந்த தொனியில்.

"சரிம்மா" என்றாள் அவள் அமைதி மாறாத குரலில்.

ராதா வீட்டில் அவள் போய் நிற்கவும், ராதாவின் தகப்பன் உடனே கிருஷ்ணாவை கூப்பிட்டார்.

"என்ன கிருஷ்ணா எதுக்கு குக் எல்லாம்? நாங்க ராதாவை நல்லா பார்த்துக்க மாட்டோமா?" என்றார் சாதாரணமாக.

"ஓ குக் வந்து இருக்காங்களா? குட், அங்கிள் நீங்க பார்த்துக்க மாட்டீங்கன்னு அனுப்பிருக்க மாட்டாங்க, ராஸை இன்னும் நல்லா பார்த்துக்க தான் அனுப்பிருப்பாங்க, ப்ளீஸ் டோண்ட் மைண்ட் அங்கிள்" என்றான் அமர்த்தலாக.

"ம்ஹூம்.. ஓகே எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை, எனிவேஸ் தேங்க்ஸ் கிருஷ்ணா" என்றுவிட்டு போனை வைத்தார் அவர்.

"இட்ஸ் ஓகே அங்கிள்" என்றுவிட்டு அவன் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அன்று வளைகாப்பு,வெங்கடேசனும் வேணியும் கொள்ளாத சந்தோஷத்தில் உலகத்தையே அழைத்து இருந்தனர். அந்த ஊரில் இருந்த அத்தனை கோவில்களிலும் அன்று அதிகாலை முதலே பூஜை ஏற்பாடாகியிருந்தது. வீட்டில் நூற்றுகணக்கான பண்டிதர்களும் ஐயர்களும் வந்து ஹோமம் வளர்த்தனர்.

கிருஷ்ணாவும் ராதாவும் சற்று நேரம் ஹோமத்தில் அமர்ந்து இருந்தனர். கிருஷ்ணா சற்று நேரத்திற்கு எல்லாம் தலைமை புரோகிதரிடம் கேட்டு கொண்டு ராதாவை கீழே இருந்த அறையில் ஓய்வெடுத்து கொள்ள அனுப்பி வைத்தான். மகன் ஒற்றையாய் பூஜையில் இருப்பதை பார்க்கவும் , வேணி அவனை எழுப்பிவிட்டு தான் தன் கணவருடன் வந்து பூஜையில் அமர்ந்தாள். சிரித்து கொண்ட மகனை பார்த்து "கடைசியில் வந்து சேர்ந்துக்கோங்க, நீயும் ரெஸ்ட் எடு சாயங்காலம் வளைகாப்பில் உனக்கும் தான் வேலை இருக்கும்" என்று கூறி எழுப்பி விட்டாள்.

இதுவும் காதலா?!!!Where stories live. Discover now