கண்ணண் கீர்த்தியின் கண்கள் மூடியிருப்பதை கண்டு தன் தொடுகையை அவள் விரும்ப வில்லை என்று எண்ணியவன் அவள் கையில் இருந்த பால் செம்பை பிடுங்கி தரையில் வீசினான்.
பால் அறையெங்கும் சிதற, பால் செம்பு அங்குமிங்கும் உருண்டு ஓடி கண்ணணிண் காலருகே வந்து நின்றது.
கீர்த்தியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. கோபத்துடன் கண்ணணை முறைத்தாள்.
" என்னடீ பார்க்கற? இந்த முட்டை கண்ணால முறைச்சு பார்த்தா நான் பயந்துடுவனா? ஏன் நான் தொட்டா மேடம்க்கு பிடிக்கலையோ?... " என்று கீர்த்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு
" எப்படி பிடிக்கும். சங்கர் சார்..." என்று ஆரம்பிக்க, கீர்த்தியின் அக்கினி பார்வையில் அனல் அதிகமானது.
' என்ன இப்படி பார்க்கறா? என்ன சொன்னேன் ' என்று யோசித்தவன், தான் சொன்னதை எண்ணி அருவருப்படைந்து,
" Oh god. I didn't mean keerthi . நான் உன்னை Insult பண்ணணும் சொல்லல " என்றவன் கீர்த்தியின் முகம் கொதிப்பில் இருந்து தணியாமல் இருப்பதைக் கண்டு இவனும் கொதிப்பாய்
"நான் சொன்னதுக்கே இப்படி முறைக்கறியே? நான் போகாதனு கையை பிடிச்சா, என் கைய தட்டி விடற? உன்னை....? " என்று முறைத்தவன்,
" இன்னொரு முறை நான் தொடும் போது கையை தட்டி விட்ட, நான் மனுசனா இருக்க மாட்டேன் "
YOU ARE READING
அவளும் நானும்
Romanceகாதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see