இருவரும் கீழே இறங்கி வர அங்கு இனியா தன் அன்னையிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். இனியா "நீ சொன்னபடி நாங்க எல்லாரும் கேட்டோம்ல மா,, இப்போ நாங்க சொல்றபடி நீயும் போயி ஆப்ரேசன் பண்ணிக்கனும் சரியா" என்று இருகைகளிலும் தன் அன்னையின் கை பற்றி கேட்டாள். அதற்கு மணிமேகலை "சரி டா கண்டிப்பா போயி ஆப்ரேசன் பண்ணிக்கற,, என் ரெண்டு பிள்ளைகளையும் கரசேத்தாச்சு இனி நான் என்ன ஆனாலும் நிம்மதியா கண்ண மூடுவேன்" என்க.
அப்பொழுது சரியாக கீழே வந்த அன்புவின் காதில் அதுவிழ,, தன்தாயிடம் சென்ற அவன் " ஏன் மா இப்டி பேசறீங்க?? அதெல்லா உனகளுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாம ஆப்ரேசன் பண்ணிக்கோங்க" என்று கூற சரி என்பதைப்போல் மணிமேகலை தன்தலையை அசைத்தார். எழில் சமையலறைக்குள் இருந்த தன் அன்னையிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தால்.
அப்பொழுது தொலைபேசியில் பேசியபடி வந்த இசை தன் தொலைபேசியை வைத்துவிட்டு அன்புவிடம் வந்து "டேய் மச்சா... செம குட் நியூஸ் டா" என அதற்கு அன்பு "என்ன குட் நியூஸ்??" என்று கேட்க அதற்கு இசை "அவர் ட்ரீம் ப்ராஜெட்" என்று கூறவர அதற்குள் அன்பு " கெடச்சுருச்சா மச்சா " எனக்கேட்க கட்டை விரலை உயர்த்தி சிரித்துக்கொண்டே "ஆமா" என்றான் இசை.
அங்கு நாளிதழில் மூழ்கி இருந்த இன்பா (இன்பராஜன்) இவர்களைப்பார்த்து "ரொம்ப சந்தோசம் பா,, ஏதோ சின்ன பசங்க சும்மா கம்பெனி அது இதுனு சொல்லீட்டு இருக்கீங்கனு நெனச்ச பரவால டா சாதுச்சுட்டீங்க... நல்ல நேரம் ஆரமுச்சுருச்சு " என்க அதற்கு தாத்தா " எல்லாம் என் பேத்திகள கல்யாணம் பண்ணிகிட்ட யோகம் தான் " என்று கூற
இசை சிரித்துக்கொண்டு " ஆமா இனியா மை லக்கி சார்ம் டா" என முனுமுனுக்க அதைக்கண்டு இனியா முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள். தாத்தா கூறியதில் கடுப்பான அன்பு "அது எப்டி தாத்தா இத்தன நாள் நாங்க கஷ்டப்பட்டு வேல பாத்து ப்ராஜெட் வாங்குனா இவங்க யோகம்னு சொல்லறீங்க,, இது டூ மச் தாத்தா" என்று கூறிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்குச்சென்றான்.
YOU ARE READING
நெஞ்சமெல்லாம் காதல் (Completed)
RomanceRank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்...