கதவில் சாய்ந்தபடி கைகளால் முகத்தை மூடி அழுது கொண்டே " ஆறு மாசமா பாக்காம இருந்துட்டு இன்னைக்கு பாக்கலாம்னு ஆசையா வந்த, ஆனா உனக்கு என் ஞாபகமே இல்ல அப்படி இருந்திருந்தா என்ன பாத்துட்டு போயிருப்ப... எனக்கு தெரியும் டா அது சும்மா அபெக்க்ஷன் தான், பாத்தயா ஆறு மாசத்துல என்ன மறந்துட்ட... ஆனா ஆனா... நா... நா" என்று கூறமுடியாமல் அழுதவள்...
மீண்டும் ஒருசில நொடிகள் கழித்து " என் ப்ரண்ட்ஸ் எதுக்கு டா அப்படி ஒரு கேம் வைக்கனும் நீ ஏன் கரெக்ட்டா மூனு நாள்ள என்ன பாக்கனும்.. எனக்கு ஏன் உன்ன புடிக்கனும்,, நா ஏன் டா உன்ன லவ் பண்ண... நமக்கு ஏன் கல்யாணம் ஆகனும்... மணி ஏன் பொய் சொல்லனும்.. நீ ஏன் டா என்ன லவ் பண்ண?? மாமா என்ன ஏன் அப்படி கேக்கனும்... நா போறனு சொன்னா நீ எப்படி விடலாம்... எத்தன டைம் இனியாக்கு வீடியோ கால் பண்ணி பேசுனேன் நீ பக்கத்துல தானு இருப்ப ஒரு டைம் ஒரே ஒரு போன வாங்கி பேசீருக்கலாம்ல... இனி நான் உன்ன நெனைக்க மாட்ட எனக்கு நீ வேண்டா.. ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ....." என்று அழுது கொண்டிருந்தாள்....
அவளது காதோரத்தில் " ஐ லவ் யூ " என்று கேட்க அவளோ அதிர்ந்து பார்க்க அவளை கதவோடு சேர்த்து இரு கைகளில் சிறை செய்தவாறு அன்பு நின்று கொண்டு இருந்தான்...
எழில் " நீ..... ந்நீ........" என்க...
அன்புவோ " ம்ம்ம்ம் நான் தா.... " என்க, அவளோ கனவோ என்று இரு கண்களையும் தேய்க்க... அவளது இடையை கில்லியவன் " கனவு இல்ல... வலிக்குதா..." என்க...
அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் " நா... உள்ள.... ஆமா நீ எப்படி.... " என்று திரும்பி கதவைத் திறக்க முயல...
அவனோ " உன் ஞாபகமா இன்னும் இந்த கதவ ரெடி பண்ணாம தான் வெச்சுருக்க..." என்க...
அவளை தன்புறம் திருப்பியவன் " எழில் ஐ லவ் யூ... இன்னும் எத்தன வருசம் ஆனாலும் உன்மேல இருக்க லவ் மாறாது... நீயும் என்ன லவ் பண்ற ப்ளீஸ் ஒரு டைம் உன்வாயால சொல்லு... " என்க..
அவளோ எதுவும் கூறாமல் நிற்க... அவளை மென்மையாக அணைத்தவன் நெற்றி, மூக்கு என்று முத்தமிட, இதழை நோக்கிச் செல்ல... கைகள் நடுங்க அவளோ " அன்பு.... இல்ல.... இப்போ எதுவும் வேண்டா... " என்க...
YOU ARE READING
நெஞ்சமெல்லாம் காதல் (Completed)
RomanceRank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்...