அன்போடு காதல் கணவன்- 12

2.3K 179 32
                                    


அன்போடு காதல் கணவன்- 12

"மஹா!" என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தான் ஷக்தி.

உள்ளே மஹா இல்லாமல் போக, "வீடு முழுக்க தேடிட்டேன். இந்த கேடி எங்க போனான்னு தெரியலையே" என்று வாய்விட்டு சொன்னவன் கையில் கஷாயம் இருந்தது.

'இவளை என்ன தான் பண்றது? எப்போ பாரு மருந்துன்னா எனக்கு ஆட்டம் காட்டிட்டு ஓடிட்றா. இவளை தேடி கண்டுபுடிச்சு நான் இந்த மருந்து கொடுக்குறதுக்குள்ள இந்த மருந்து வீணா போய்டும். தினமும் இதே வேலையா போச்சு.' என்று தனக்குள்ளே புலம்பியவனின் தங்களின் அறையில் தான் மஹா இருக்கிறாள் என்பதை உணர்ந்து விழிகளை மட்டும் சுழலவிட்டான்.

"ஹேய்! மஹாகுட்டி. எங்க இருக்க? ஒழுங்கா வந்துடுடி. உன் வயித்துல என் குட்டி பாப்பா கூட இவ்ளோ அட்டகாகசம் பண்ணாதுடி. என் செல்ல பொண்டாட்டில்ல? வந்துருடி." என்றான் மெல்லிய புன்னகையை உதிர்த்தபடி.

அறையில் எந்த சத்தமும் இல்லாமல் போக, சிறிது கடுப்பானவன்.

"நீயா இப்போ வெளிய வந்துட்டேன்னா தப்பிச்ச இல்ல நானா கண்டுபுடிசிட்டேன்னா உனக்கு எவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் கொடுப்பேன்னு தெரியும்டி" என்றான் சுற்றிமுற்றி பார்த்து.

ஓரிடத்தில் அவனின் விழிகள் அவளை கண்டுகொண்டன, ஆம்... அவனின் குரலில் இருந்த தீவரத்தில் உடல் சிலிர்த்து தான் இருந்த கப்போர்டின் உள்ளே இன்னும் தன் காலை இழுத்துகொள்ள வழக்கம் போல் அவளின் சேலையின் சிறு நுனி அவனின் கண்களில் பட்டுவிட்டது.

"மாட்டினியா டி பொண்டாட்டி. இன்னைக்கு உன்னை..." என்று குறும்பு புன்னகையை செலுத்தி அவளிடம் நகர்ந்தான்.

"எத்தனை தடவை சொல்றது புடவையை ஒழுங்கா அடுக்கி வைன்னு. சொன்னா கொஞ்சம் கூட மதிக்கறதில்ல." என்று புன்னகையோடு அந்த சேலையின் நுனியை பிடித்து உருவ, அது இன்னும் உருவிக்கொண்டே வந்தது.

'அயோ! இவர் நான் இங்க இருகிறதை கண்டு பிடிச்சிட்டாரா? இல்லை தெரியாம இழுக்குறாரா? கடவுளே காப்பாத்து' என்று கப்போர்டில் இருந்து வெளி வரவும் முடியாமல் தன் புடவையையும் இழுத்து படிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

அன்போடு... காதல் கணவன்... Completed Where stories live. Discover now