"அதுக்காக நிலா இருக்க இடம் தெரிஞ்சும் என்னால சும்மா இருக்க முடியாது" என்றான் கருங்குழலன்.
"டேய் கோபபடாத. நாம் எதாவது அவசரபட்டா அது நிலா உயிருக்கு ஆபத்து. இங்க வாங்க ரெண்டு பேரும் இதை பாருங்க" என்றான் க்ருஷ்வந்த்.
இருவரும் அவனிடம் செல்ல க்ருஸ்வந்தின் லேப்டாப்பில் "எனக்கு ஏதோ தப்பா பட்டுது அதனால உங்க வீட்டை கண்காணிக்க சொன்னேன் அதுபடி உங்க வீட்டு முன்னாடி கொஞ்சம் தள்ளி ஆறுமணி நேராமா ஒரு கார் நிக்குது. உங்க ஸ்ட்ரீட்ல இருக்க கண்காணிப்பு கேமரால அது பதிவாகி இருக்கு." என்றான் க்ருஷ்வந்த்.
"இப்ப என்ன பண்றது?" என்றான் கருங்குழலன் பதட்டமாய்.
"என்னோட கணிப்பு சரின்னா இன்னும் அரைமணி நேரத்துல அவங்க கிட்ட இருந்து போன் வரும். நீ வீட்ல இல்லைன்னு கேப்பாங்க" என்றான் க்ருஷ்வந்த்.
"என்ன சொல்றது? இதால நிலாக்கு எதுவும் ஆகிடகூடாது." என்றான் குழலன் கவலையாக.
"ஹ்ம்ம் அதுக்கு ஒரு வழி இருக்கு" என்று யோசித்த ஷக்தி சுரேஷிற்கு போன் செய்தான்.
"சொல்லுங்க பிரதர்" என்றான் சுரேஷ்.
"இந்த மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. என்னடா பண்ற?" என்றான் ஷக்தி.
"நீ தான் மூணு மணிக்கு வெளிய போலாம்னு சொல்லிட்டியே? அதான் என் ஜானு மை லவ். அவ என் மேல கோவமா இருக்கா. அவளை சமாதனபடுதலாம்னு போனேன்... அதுக்குள்ள நந்தி ... மா..திரி.. நீங்க போன் பண்ணிட்டிங்க" என்றான் இழுத்து ராகமாய் சுரேஷ்.
"டேய் எரும! இப்போ அது ரொம்ப முக்கியமா? ஒரு வெங்காயமும் வேண்டாம். ரொம்ப அவசரம் நான் சொல்ற இடத்துக்கு உடனே வா" என்று தான் இருக்கும் இடத்தை கூறினான் ஷக்தி.
"சரிங்கண்ணா. நீங்க சொல்லி நான் வராம இருப்பேனா? இன்னும் பத்து நிமிஷத்துல அங்க உங்க முன்னாடி அடியேன் இருப்பேன்" என்றான் சுரேஷ்.
அடுத்த இருபது நிமிடங்களில் வந்து நின்றான் சுரேஷ்.
அதற்குள் என்ன செய்யவேண்டும் மூவரும் முடிவு செய்துவைத்தனர்.
YOU ARE READING
அன்போடு... காதல் கணவன்... Completed
General Fictionநெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....