Chap - 17

3.4K 140 37
                                    

நாட்கள் உருண்டோட, சசி இறுதி ஆண்டிலும், மதி இரண்டாம் வகுப்பிலும் இருந்தனர். என்றிலிருந்து சசி இவளிடம் மூகம் பார்க்க கூடாது என்று சொன்னானோ அன்றிலிருந்து, சசி எத்தேசையாக இவள் மூன்னால் வந்தாள் கூட, மதி தலைதெறிக்க எதிர்புறம் ஓடி விடுவாள்.

பால்யகால நண்பர்களான மூர்த்தி- குமரன் திடிரென்று சந்திக்க, குடும்பம் தொழில் என்று பேசிக் கொண்டிருக்க, தன் கடைசி மகள் மதிக்கு மாப்பிள்ளை தேடுவதாகவும், வரதட்சனை அதிகம் கேட்பதால், கவளையாக இருப்பதாக கூற, குமரன் தன் மகன் சசிக்கு திருமணம் முடிக்க கேட்க, நல்லபடியாக அடுத்த காரியங்கள் நடைப்பெற்றது.

வெற்றியின் குடும்ப நிலை கருதி தான் குமரன் சசியின் பிடித்தமின்மையை எதிர்த்து கல்யாணத்தில் உறுதியாக நின்றார்.

கல்யாணம் முடிந்து சண்டையும், சீண்டலுமாய் சென்று கொண்டிருக்க தூக்கத்தில் சசியின் நியாபகத்தில் வெங்கி என்று மதி அழைக்க, சசியோ நிதினை தான் அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி கோவமாக இருந்தான்.

மஞ்சள் கயிறு மேஜிக் ஆண்களுக்கும் நன்றாக வேலை செய்ய மதியின் மேல் கோவமாய் இருப்பதுப் போல் இருந்தாலும், அவளின் மேல் காதல் கொண்டது அவன் மனம்.

எல்லாம் சரி ஆகி வரும் பொழுது, அன்று கடையில் அவனை பார்த்தார்கள். ஆமாம், அது நிதின். அவனை பார்த்ததும், சசிக்கு பழைய நியாபகங்கள் வர, வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

அன்றிரவு சசி மதியின் வீட்டில் இருந்த புத்தகத்தை பார்க்க, அதில் தேன்மதி சசி வெங்கடேஷ் என்று எழுதியிருக்க குழம்பி தான் போனான் சசி.

மறு நாள் நிதினிடம் சென்று உண்மையை சொல் என்று மிரட்ட, மதியை பழி வாங்க அவன் செய்தது என்று அனைத்தையும் கூறினான். தன் தவறை உணர்ந்து அவன் மேலே கோவம் கொண்டு அவளை பார்க்க மனமில்லாமல் தாமதமாக இரவு வீட்டிற்க்கு சென்றான்.

மறுநாள் உண்மையிலே வேலை நிமித்தமாக வெளியில் செல்ல, வேறு எதோ விபத்தை பார்த்து, தான் என்று நம்பி, மயங்கினாள் மதி. ராதிகாவின் நம்பர் புதியதாக இருந்ததால் எடுக்காமல் விட, அனைவரும் வீடு செல்ல, சசி மட்டும் தனியாக ராதிகான் வீடு சென்று மன்னிப்பு கோரி, மதியின் மனதை கேட்டு அறிந்தான். "வீனோத் மிகவும் நல்லவன், என்னை மாறி இல்ல, என்னால் நீங்க இரண்டு பேறும் சேராம இருக்காதிங்க, நல்ல முடிவா எடு மா!" என்று கூறி சென்றான்.

பட்டாம்பூச்சி சிறகுகள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin