நினைவுகள்..

240 8 98
                                    

வணக்கம் மக்கள்ஸ்...!

எவ்வளவு நாளைக்கு தான்... தவைவரும் அடிவிழுது தொண்டனும் வருவாங்க.... அப்புறம் ரொம்ப காமெடியாவே போயிட்டு இருக்கு கொஞ்சம் மனசோட நெருக்கமா... சுகமா தென்றலோடு உறவாடுவது போல....  நினைவுகளோட வாழ ஆசை...!

நினைவுகள் எப்போதும் சுமையானது கிடையாது சுகமானது ங்க ..நினைவுகள்ல இரண்டு விதம் இருக்கும்...நல்லது கெட்டதுன்னு... ஆனா காலம் கடந்து பின்னாடியும் இரண்டுமே சிரிப்பையும்..., வலியையும் தான் வரவழைக்கும்...

இந்ந சுகமான நினைவுகள்ல  நினைக்கும் போதே நம்ப அனுமதியே இல்லாம கண்ணீர் வரும் பாருங்க... ( நான் கூட நிறையாவே அழுது இருக்கேன்... வெங்காயம் உறிக்கும் போது...)

நீ வந்துட்டியா... ( உன்னை விட்டு நான்‌என்னைக்கு பிரிஞ்சு இருக்கேன்... சொல்லு...)

இங்க உன்னை கவுண்டர் குடுக்க கூப்பிடல....( தெரியும்பா... நானும் பாலோ பண்ணிட்டு தான் வரேன்... நானும் கொஞ்சம் பீலீங்கா தான் பா இருக்கேன்...)

அப்படி என்ன பீலீங்கு...( என்ன சொல்லறது இந்த மனசு மட்டும்‌ என்ன கல்லறையா எல்லா விஷயத்தையும் போட்டு புதைச்சு வைக்க வலிக்குதுபா ரொம்ப...)

ஆமா மனசா இருக்கிறது ரொம்பவே கஷ்டம் தான்...புரியுது...

ஆமா நமக்குள்ள சொல்லவே முடியாத பல வலிகள் நினைவுகளா ஒளிச்சு தான் இருக்கு...

சின்னவயசுல மயில் இறக்கை வளருன்னு ஆரம்பிச்சதுல.. இருந்து.. நம்ப கடைசி காலத்தில இந்த நினைவுகள்ல அசைப்போடற வரைக்கும்... எல்லாம் நினைவுகளா மூளையில இருக்குதோ இல்லையோ மனசுல நிக்கும்...

என்னை விட்டு போயிடுவியா குட்டி..

ஆமா குட்டி.. அப்பாவுக்கு வேலை வேற ஊர்ல ...
இனி நாம் ஆத்துல ஒண்ணா குளிக்க முடியாது... டவுசரு மாத்திக்க முடியாது... ஆயா கடையில மாவு உருண்டை திருட முடியாதாடா..

முடியாது குட்டி....!

போடா அப்ப நான் உன் கூட கா...

வாங்க பேசலாம் ...!Where stories live. Discover now