பகுதி - 5

4.3K 195 52
                                    

"என்னை மன்னிச்சிடுங்கமா! அவ என்னோட வைப்" என்றதும்

என்ன செய்வது என்ன சொல்வது எப்படி ரியாக்ட் பண்ணுவது என புரியாத ஷமீனா
கைகளால் காதுகளிரண்டையும் இறுகப் பொத்தியபடி "இல்லை இல்லை என் புள்ள அப்படி பண்ண மாட்டான்" என்பதையே திரும்ப திரும்ப சொல்லியபடி இருக்க

"நான் இப்படி பண்ணினதற்கு காரணம் கூட நீங்க சொல்லி கொடுத்த பழக்கவழக்கங்கள் தான்மா ஒரு பொண்ணு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொது அவளோட வாழ்க்கைய காப்பாத்துரதற்காக தான் இப்படி பண்ணேன்..அதுவும் நீங்க புரிஞ்சிபீங்கன்ர நம்பிக்கையில தான்"

"என்னபா சொல்ர நீ...உன்னோட கல்யாணத்த பற்றி நான் எவ்வளவு கனவு வச்சி இருந்தேன் தெரியுமா கடைசியில என் கண்ணால கூட பார்க்க முடியாதபடி பண்ணிட்டல்ல...எங்களோட வசதிக்கும் உன்னோட அழகிற்கும் ஒரு பேரழகி மனைவியாக கிடச்சிருப்பாடா நீ என்னனா"...என்கையில் குறுக்கிட்டவன்

"என்னமா நீங்க போய் இப்படி பேசுறிங்க
பேரழகி கிடச்சிட்டா மட்டும் வாழ்க்கை சந்தோஷமா இருந்திடுமா...சாரா ரொம்ப நல்ல பொண்ணு மா போகப்போக உனக்கே தெரிஞ்சிடும்" என்றான்.

உடனே "வாயை மூடு அஹமட்!!"என கத்திய ஷமீனா அந்த அர்ஷாட் இதற்காக தான் இவ்வளவு காலம் உன் பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கானா ?! அவன் புத்திக்காரன் தான் எப்படி ப்ளான் பண்ணி அவன் தங்கச்சிய உன் தலையில கட்டி விட்டு எப்படி சொத்து எல்லாத்தையும் அடைய பார்க்கிறான் பாரு என்ற பேசிக் கொண்டே சென்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அஹமட் அன் இரத்தம் கொதிக்கும் வீதத்தை அதிகரிக்கச் செய்ய

"போதும்மா போதும் நிறுத்து...என கத்தியவன் எனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு ஆனால் வீணாக அர்ஷாட் ஐ பற்றி தவறாக பேசாத அவன் ஒன்றும் சொல்லி நான் சாராவை கல்யாணம் பண்ணிக்கல நான் என்னோட இஷ்டத்திற்கு தான் பண்ணிக்கிட்டேன்" என்றவன் இரண்டு அடி முன்னோக்கி எடுத்து வைத்தபடி
"மற்றது நான் ஒன்றும் சின்ன குழந்தையல்ல என்னோட லைப் ஐ டிசைட் பண்ண என்னால முடியும்" என்றான்.

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Where stories live. Discover now