மர்மம்-17

484 38 29
                                    

இறுதியாய் சென்ற லியானை விரைந்து சென்று கட்டிக் கொண்டான் சத்யா.... இருவரும் ஓரிரு நிமிடங்கள் அப்படியே திற்க.... திடீரென திரன்....

நிரன் : நானும் மெடர்மான்க்கு போறேன்.... என்றான்....

அனைவரும் அவனை புரியாது நோக்க... அவன் முகத்தில் சென்றே தீருவேன் என்ற தீர்மானம் தெள்ள தெளிவாய் தெரிய.... அனைவரும் அவனை தடுக்க.... அவன் அருகில் சென்ற அஜிம்சனாவோ... அவன் முகத்தை தன் புறம் திருப்ப.... அவனோ அவள் கண்களை பார்த்தவன் அமைதியையே கடைப்பிடிக்க.... இன்னும் அந்த பிடிவாதம் அவன் முகத்தில் பிரதிபலிக்க.... அமைதியாய் ஓரிரு நிமிடங்கள் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவள்...

அஜிம்சனா : போய்ட்டு வா... என்றாள் அமைதியாக.... இந்த பதிலை எவருமே அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.... நிரனும் தான்.... அவன் சற்றே ஆச்சர்யத்தை அவன் பார்வைவில் காட்ட....

அஜிம்சனா : போய்ட்டு வா... நீ அங்க இருந்து ஹெல்ப் பன்னு... நா இங்க இருந்து பாத்துக்குறேன்... இப்போ ஏன் என்ன இப்டி பாக்குறீங்க எல்லாரும்...

அனாமிக்கா : நீயாவது அவன தடுப்பன்னு பாத்தா... என்னடி போய்ட்டுவான்னு வழி அனுப்புற.????

அஜிம்சனா : மூன்ல இருந்து அப்டேட் ஆய்ட்டே இருக்கும் டி... நாங்க இரெண்டு பேருமே இங்க இருந்துட்டா... மெடர்மான் ல எப்டி தெரிவிக்கிறது... சோ... எங்கள்ள ஒருத்தர் அங்க இருக்கனும்... அதனால நிரன் அங்க போகட்டும்... நா இங்க இருக்கேன்...

வினய் : என்ன அஜிமா நீயும் இப்டி சொல்ற...

அஜிம்சனா : அட... எங்கண்ணா போக போறான்... போய்ட்டு வந்நுருவாங்க எல்லாரும்... என உறுதியளிக்க.... சரியென ஒரு மனதாய் அனைவரும் ஒத்துழைத்தனர்....

நிரன் : தன்க்ஸ் டி... போகாதன்னு சொல்லி தடுத்துடுவியோன்னு நெனச்சிட்டே இருந்தேன்... நீயே புரிஞ்சிட்டு அனுப்பி வைக்கிறது.... நிம்மதியா இருக்கு....

அஜிம்சனா : கொன்னுடுவேன்.. புதுசா என்னடா தன்க்ஸு... உன்ன பத்தி எனக்கு தெரியாதா ... உன் நிம்மதி எதுல இருக்கும் னு எனக்கு நல்லாவே தெரியும்... பாத்து போய்ட்டு வாங்க... என அவள் கூறிய விதத்தில் ஏதோ இருக்குமோ... என்று அனைவருக்கும் சந்தேகம் எழ... நிரனின் மனமோ... நிச்சையம் ஏதோ இருக்கு... என அடித்து கூறியது...

மதி மர்மம்(முடிவுற்றது)Where stories live. Discover now