1.

5.7K 155 5
                                    

"என்ன பா சொல்லுரீங்க.ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை",என்று சஞ்சனா வினவினாள்.

"உன்னை கேட்டால் நீ வேண்டாம் என்று தான் சொல்லுவ.அதான் சொல்லலை",என்றார்.

"சரி எப்போ வராங்க",என்றாள் சங்க‌டமாக .

"நாளை காலை",என்றார.்

சஞ்சனாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தன் வீட்டின் பின் புறம் தனது பாட்டி தங்கி இருந்த பகுதியை இப்போது வேறு ஒரு குடும்பம் ஆக்கிரமித்துக் கொள்வது அவளுக்கு பிடிக்கவில்லை.சஞ்சனாவின் அப்பா ஒரு பெரிய வியாபாரி.அவர் கடையில் ஒரு தீ விபத்து ஏற்ப‌ட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.அந்த வியாபாரத்தை அடியோடு விட்டு விட்டு இப்போது ஒரு வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.பண தேவை அதிகரித்ததால் தனது வீட்டின் பின் பகுதியை வாடகைக்கு விட எண்ணினார் ஆனால் சஞ்சனாவுக்கு தனது பாட்டியின் நினைவாக இருக்கும் அறையில் வேறு ஒருவர் தங்குவது பிடிக்கவில்லை.மேலும் அது அவளுடைய சுதந்திரத்தை பாதிக்கும் என்று நினைத்தாள்.

"நான் இரவில் பொழுதை போக்க பின் புறம் உள்ள புல்வெளியில் உலாவுவேன்.காலையில் அங்கு அமர்த்து படிப்பேன்.இனி எப்படி அதை செய்ய முடியும்.ச்சீ இனி நான் சுதந்திரமாக இருக்கவே முடியாது",என்று தனகுள்ளே புலம்பி கொண்டாள்.

காதலில் விழுந்தேன்Onde as histórias ganham vida. Descobre agora