25. மாமா உன் பொண்ண குடு

1.2K 76 18
                                    

ராகவ் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஆரவின் கார் பொறுமையின்றி நின்றது.

உள்ளே இருந்து பதட்டத்துடன் வெளி வந்தவனை அங்கு நின்றிருந்த ராகவ் கண்டு அவனிடம் நெருங்க,

"என்னாச்சி இங்க எதுக்கு வர சொன்னிங்க?" என்றவனின் பதட்டம் நிறைந்த கேள்விக்கு, அமைதியான பார்வையோடு,

"நியூஸ் பார்த்தியா?" என்றார்.

"பார்த்தேன் இப்போ.. அதுக்கு என்ன?" என்றவனின் குரலில் பயம் அதிகமிருக்க,

"இன்னைக்கு காலைல கண்டுப்பிடிச்ச கார் வினையோடது. அதில இருந்த பாடியும் மாயாவுடைய அப்பா மிஸ்டர் வினையோடது தான்னு போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கன்பார்ம் ஆகிடுச்சி." என அவர் கூறிய நொடி வினையின் சிரித்த முகம் அவன் மனதில் மின்னி மறைய, அவனுக்கு மிகவும் பிடித்த நபரில் ஒருவரான அவர் இப்பொழுது அவன் வாழும் இந்த மண்ணில் இல்லை என்னும் உண்மையை அவன் சிந்தை உணர்ந்த நொடி கால்கள் வழுவின்றி கண்ணில் நீர் தேங்கி, சட்டென தள்ளாடியவனை தாங்கிப்பிடித்த ராகவ், ஒரு இருக்கையில் அமர வைத்து அவனுக்கு குடிக்க குளிர்பானம் வாங்கிக்கொடுத்தார்.

ஆனால் எதையும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. இது கனவாய் இருந்திடக் கூடாதா என ஏங்கிய அவன் மனம் மாயாவைப் பற்றின கவலைக் கூட இன்றி ஊமையாய் உள்ளே கதறிக்கொண்டிருந்தது.

"ஆரவ் ஆரவ்.. நீயே இப்படி உடைஞ்சு போய்ட்டினா மாயாவை யார் டா தேத்துறது?" இடிந்துப் போய் அமர்ந்திருந்தவனிடம் கூறியவர்,

"மாயாக்கிட்ட இந்த உண்மையை கண்டிப்பா சொல்லனுமா?" என கேட்க,

"அவ அப்பாவை பத்தின உண்மையை மறைக்க எனக்கு என்ன ப்பா உரிமை இருக்கு. ஏற்கனவே மறைச்சது போதும். கடைசியாவாது அவ அவளோட அப்பாவை பார்க்கட்டும்." என்று அந்நிலையிலும் தெளிவாய் பதிலுரைத்தவன் அறியவில்லை அவனவளை இப்பெரிய இழப்பிழிருந்து எப்படி மீட்கப் போகிறான் என்று.

முதலில் அவன் மீளவே எத்தனை நேரம் பிடிக்குமென்பதை அவன் அறிந்திருக்கவில்லை. வினை என்றால் அவனுக்கு அத்தனை பிரியம். ஒரு தந்தை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அவன் மனதின் கற்பனைக்கு, நிஜமான உருவமாய்த் தான் வினை அவனுக்கு எப்பொழுதும் தெரிவார்.

விண்மீன் விழியில்..Unde poveștirile trăiesc. Descoperă acum