episode 20

2.4K 91 21
                                    

புத்தம் புது காலை பொன்னிற வேளையாக மலர.... அஷ்வின் தன் விழிகளை திறக்க கட்டிலில் சஞ்சனா இருக்கவில்லை அருகில் உள்ள ஸ்டூலில் ஒரு காகிதம் கிடந்தது

உடனே ஆவளுடன் கையில் எடுத்து படிக்க அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி பொங்கியது

அக் காகிதத்தில் " என்ன மன்னிச்சிடு அஷ்வின் இனிமே நான் ஒனக்கு தொந்தரவா இருக்க மாட்டேன் அப்படி இருக்கவும் விரும்பல இனிமே உன் இஷ்டம் போல இருக்கலாம் கண்ட கண்ட கருமத்த குடிக்காதீங்க உடம்ப நல்லா பார்த்துக்கோ பாய்"என்று எழுதியதுடன் இரு கண்களை கிறுக்கி அதில் அழுகை அருவியாக வடியும் படி வரைந்திருந்தாள்

மேலும் காகித முடிவில் "இப்படிக்கு உன் இம்சை காந்தகண்னழகி" என்று முத்து எழுத்தால் பதிந்திருந்தது

அவனுக்கோ அவனது கண்களை நம்பமுடியவில்லை இது உண்மை தானா என்று பல எண்ணங்கள் அலையடிக்க கடைசியில் இது உண்மை தான் என்று முடிவுக்கு வந்த மறு நொடியே தன் போனில் சத்தமாக குத்து பாடல் ஒன்றை போட்டு டான்ஸ் ஆடத் தொடங்கினான்

கட்டிலிக்கு கீழே உள்ள உருவம் அனைத்தையும் நோட்டமிட்டது மேலும் ஒரு நிமிஷம் கூட தாமதிக்காமல் உடனே வெளியே வந்தாள் சஞ்சனா

அஷ்வின் டான்ஸ் ஆடிய வண்ணம் திரும்ப அங்கே இவளது தரிசனம் கிடைத்தது

அஷ்வின்"ஏய் நீ போகல ?" என்க
"நான் எங்க போறது" என்று சர்வசாதாரணமாக கேட்டாள்

"அப்போ இந்த லெட்டர்" என்று நீட்ட " ஓஹோ அதுவா அது நான் சும்மா எழுதினேன் ஆனா சார்க்கு ஆட்டம் எல்லாம் பலமா இருக்கு" என்றாள் சஞ்சனா

" அதானே நானும் பார்த்தேன் என்ன புடிச்ச சனியன் எங்க என்ன விட்டு போகும் எல்லாம் என் நேரம்"என்றான் நெற்றியை சுருக்கியவாறு

சஞ்சனா" தெரியுதுல நான் சும்மா உன்னோட ரியாக்ஷன்ன பார்க்க தான் அப்படி எழுதி வச்சேன் ஆனா நான் நெனச்ச மாதிரியே நடந்திருச்சு ஆனா ஒன்னு உன்னோட ஆனந்த தாண்டவம் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு" என்க அஷ்வின் முகத்தில் அக்கினி சுவாலைகள் பறந்தது

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now