சாகரசங்கமம்-முன்னோட்டம்

281 5 9
                                    


"பையனோட ராசி நட்சத்திரம் சொல்லுங்கோ" என்ற அர்ச்சகரிடம் அர்ச்சனைத்தட்டை நீட்டிய மதிவதனி புன்னகையுடன் "வித்யாசகர், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம்" என்று சொல்ல அவர் கர்ப்பகிரகத்துக்குள் சென்று விட்டார்.

அருகில் நின்ற மகளிடம் "வித்தி எங்க போனான் ஷாலி?" என்று கேட்க அவளோ "வித்தி அண்ணா நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தா எப்போவும் என்ன பண்ணுவானோ அதை தான் பண்ணிட்டிருப்பான்மா" என்றாள் நமட்டுச்சிரிப்புடன்.

மதிவதனியோ அவரது மைந்தன் இருபத்திமூன்று வயதிலும் இன்னும் குழந்தையாக இருக்கிறானே என அலுத்துக் கொண்டபடி நெல்லையப்பரிடம் மகனுக்கு நல்ல புத்தி அளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

ஆனால் அவரது மகனோ அங்கே நின்றிருந்த பாவாடை தாவணிப்பெண்ணிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.

"இங்க பாரு! இப்போ மட்டும் நீ உன்னோட நம்பரைச் சொல்லலனு வச்சுக்கோ, உன்னைத் தூக்கிட்டுப் போய் அந்த யானை கிட்ட குடுத்துடுவேன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"இங்க பாரு! இப்போ மட்டும் நீ உன்னோட நம்பரைச் சொல்லலனு வச்சுக்கோ, உன்னைத் தூக்கிட்டுப் போய் அந்த யானை கிட்ட குடுத்துடுவேன்... அப்புறம் அது உன்னை தும்பிக்கையால சுத்தி வளைச்சிடும்" என்று மிரட்ட அவன் எதிரில் நின்றவளோ தாவணி நுனியைத் திருகியபடியே தனது முட்டைக்கண்களை உருட்டி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 அப்புறம் அது உன்னை தும்பிக்கையால சுத்தி வளைச்சிடும்" என்று மிரட்ட அவன் எதிரில் நின்றவளோ தாவணி நுனியைத் திருகியபடியே தனது முட்டைக்கண்களை உருட்டி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
சாகரசங்கமம்Where stories live. Discover now