தங்களின் துணைகள் அனைவரும் காணாமல் போனதில் ஆண்கள் அனைவரும் சற்று கலங்கித்தான் போனார்கள் ஆனால் அதே கலக்கத்தோடு இருந்தால் நிச்சயமாக தங்கள் துணைகளை மீட்டெடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு மீட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
அனைத்து பெண்களின் ஜிபிஎஸ் டிராக் செய்ய உதவும் செயின் அறுக்கப்பட்டு இருந்தது அதனால் என்ன செய்ய என்று குழம்பிக் கொண்டிருந்த நிலையில் அனைவரையும் பார்த்த அஜித் "அண்ணா வைஷ்ணவி மட்டும் காலேஜ் போயிட்டு வந்து இருந்ததுனால அவளுக்கு தெரியாம ஒரு ட்ராக்கிங் டிவைஸ் அவளோட மோதிரத்தில் செட் பண்ணி வச்சிருக்கேன் ஆனால் அது ஏதாவது அவசர தேவைக்கு உதவனும் என்றால் அதுல ஒரு பட்டன் இருக்கும் இன்னைக்கு காலைல எனக்கு என்னமோ டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு அதனால அவ கிட்ட இத சொல்லி தான் விட்டேன் ஆனா அது அவளுக்கு நியாபகம் இருந்தா நம்ம கண்டுபிடித்துவிடலாம்" என்று கூறினான்.
விஷ்வா "அஜித் அது அவளுக்கு ஞாபகம் இருக்குமா இல்லையா அப்படிங்கறது நமக்குத் தெரியாது நீ நல்லா யோசிச்சு பாரு இங்கே பக்கத்துல உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா இடம் எது அவன் பண்ற தேவையில்லாத வேலைக்கு யூஸ் பண்ற இடம் எது கொஞ்சம் ஞாபகம் படுத்தி பாரு" என்று கூறினான்.
ஆகாஷ் "அவன் யோசிச்சு சுத்தமா பிரயோஜனம் கிடையாது ஏன்னா அஜித் நம்ம கூட இருக்கிற விஷயம் அவனுக்கு தெரியும் அதனால அவன் நம்மை யோசிக்க முடியாத இடத்தில் தான் வச்சிருப்பான் ஒருவேளை அது நமக்கு ரொம்ப நெருக்கமான இடமாகவும் இருக்கலாம் அதனால எல்லா இடத்திலயும் தேடி பார்க்கிறது தான் நல்லது" என்று கூறினான்.
அவன் கூறியதை அர்ஜூன் அப்படியே ஆமோதித்தான்" நாம இப்போ இவங்க இங்கே இருப்பாங்க அப்படின்னு யோசிக்க முடியாத இடம் எதுவா இருக்கும் அப்படி யோசிச்சு பாரு கண்டிப்பா அது நம்ம வீடா இருக்காது ஏன்னா ஏற்கனவே அங்கே எல்லாம் சிசிடிவி உண்டு அது எங்க போன்ல தான் கனெக்ட் ஆகி இருக்கு சோ யோசி சரியா பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள யோசிக்கணும் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள எல்லாரையும் காப்பாற்றியாக வேண்டும் இல்லன்னா பிரச்சினை வெளியே போகிறோம் அஜய் என்ன பண்ணுவான்னு சொல்ல முடியாது" என்று கூறினான்.
YOU ARE READING
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
Romanceஇது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில்...