அத்தியாயம் 13

2.2K 86 6
                                    

ருத்ரன் தன் அருகில் அமர்ந்து இருந்த சாகித்யாவின் கைகளை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு அதில் இருந்த மோதிரத்தை பார்த்து "இந்த மோதிரம் நீ என்றிலிருந்து போட்டு இருக்கிறாய் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா" என்று கேட்டான்.

அவன் காரணமில்லாமல் எதற்கும் கேட்க மாட்டான் என்பதை புரிந்து கொண்ட சாகித்யா "நல்லா நியாபகம் இருக்கு உங்களுடைய எங்கேஜ்மென்ட் அன்னைக்கு இத என்னோட கையில கரண்ட் போன சமயத்துல யாரோ போட்டு விட்டாங்க இதை போட்டு விட்டுட்டு எக்காரணம் கொண்டும் இதை கழட்ட கூடாதுன்னு சொன்னாங்க அவங்க சொன்னதுல இருந்த அழுத்தம் என்னால இதை இன்னைக்கு வரைக்கும் கையிலிருந்து கழற்றி எடுப்பதற்கு தைரியம் வரவில்லை" என்று கூறினாள்.

அவளைப் பார்த்து மென்மையாக சிரித்த ருத்ரன் தன் கையில் தான் அணிந்து இருந்த மோதிரத்தை காண்பித்தான். எதற்காக அதை காண்பிக்கிறான் என்று புரியாமல் பார்த்தவள் பின்பு புரிந்துகொண்டு அவனுடைய முகத்தை பார்த்தாள். ஏனென்றால் இருவரும் அணிந்திருந்தது ஜோடி மோதிரம் அதேபோல் அந்த மோதிரத்தை இவள் தான் அவனுக்கு அணிவித்தாள் அதுவும் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

அதை யோசித்து பார்த்தவள் முகம் வேதனையில் கலங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் உள்ளுக்குள் வலித்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வெளியே அமைதியாக இருந்தனர். ருத்ரன் அவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து "உண்மையா உங்க அக்காக்கு என்ன எங்கேஜிமெண்ட் முன்னாடியே பிடிக்காமல் போயிடுச்சு அதற்கு மெயின் காரணம் நிச்சயத்தை பெரிய அளவில் வைக்காமல் இருந்தது மற்றும் அவளுக்கு பிடித்தமானவற்றை அவருடைய விருப்பத்தை கேட்காமல் நாங்களே முடிவு பண்றது நிச்சயதார்த்தம் நடந்த போது கண்டிப்பாக அவள் ஏதாவது செய்வாள் என்று நாங்கள் பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை அதேபோல்தான் அவளும் செய்தாள்.

நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு மோதிரம் மாற்ற அழைத்தபோது அவளுடன் நீயும் மற்றும் ஒரு சில பெண்களும் வந்தனர். மோதிரம் மாற்றும் நேரத்தில் சர்ப்ரைஸ் என்று கரண்ட் கட் ஆக கொழுந்தியா முறையில் நீயும் ஒரு மோதிரம் அணிவிக்க வேண்டும் என்று கூற நீயும் என் மேலிருந்த பயத்தில் என் முகத்தை கூட பார்க்காமல் மோதிரத்தை அணிவித்தாய் அதேபோல் நானும் உனக்கு மோதிரத்தை அணிவித்து விட்டேன். உன்னுடைய அக்கா அவள் கையாலேயே ஒரு மோதிரத்தை அணிவித்து விட்டு நிச்சயம் முடிந்து விட்டது என்று கூறி விட்டால் அதற்கு காரணமாக அவள் கையில் உள்ள மோதிரத்தை காண்பித்து விட்டாள். அனைவரும் அதையே உண்மை என நம்ப நம் இருவருக்கும் நிச்சயம் நல்ல முறையில் முடிந்தது இது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்" என்று தங்கள் நிச்சயம் நடந்த கதையை கூறினான்.

என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)Where stories live. Discover now