உயிரை கொல்லுதே காதல் ❤️ 9

1.6K 44 2
                                    

"டேய் ஹரி என்னடா பேச மாட்டேங்குற... நீ நியூஸ் பாக்கலையா? உன்னோட அண்ணா எப்படா கல்யாணம் பண்ணினார் ?"
என்று அவனது நண்பன் மீண்டும் கேள்வி கேட்டான்.
" ஆமா...ஆமா அண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு... இதை வெளியில சொல்ல இல்லடா.. அவருக்கு எதிரிங்க அதிகம் ..அதனால தான் "..என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டான்..

இல்லை என்றால் கதை வேறு மாதிரி போகும் என்று அறியாதவனா அவன்... அவனும் இந்த சில வருடங்களாகவே பிசினஸ் செய்பவன் அல்லவா?. பிறகு "ஓகே டா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. பாய் டா.. அப்றம் பேசுறேன்.." என்று கூறி அழைப்பை துண்டித்தான் ஹரிதாஸ்..

அவன் மனது "அண்ணா ஏன் இப்படி பண்ணாரு? நிஜமாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? குழந்தை இருக்கா ?"என்று யோசனை செய்து கொண்டிருந்தது.. மீண்டும் தனது அலைபேசியை எடுத்து இன்று வந்த நிவுஸ்ஸை பார்த்தான்... அதில் குழந்தையை கையில் ஏந்தி கம்பீரமாக நின்றிருந்த அண்ணனும் ,அவன் பக்கத்தில் ஒரு பெண்ணும் நிற்பதை கண்டான்.

அது அவன் குழந்தை என்பதற்கு சாட்சியாக அவனது ஜாடை வேறு குழந்தைக்கு இருந்தது.. தர்ஷினி தாய் தந்தை இருவரின் ஜாடை கொண்டு பிறந்தவள்..
" அப்படி என்றால் இது உண்மை தான் போலும்... இது இப்போது? அண்ணனிடம் கேட்க வேண்டும்..." என்று வீட்டுக்கு புறப்பட்டான் ஹரிதாஸ்.

இங்கு ஊர்மிளாவின் தாயோ அவளை கேள்வி கேட்டே கொன்று விட்டார்...
" என்னடி இப்படி நியூஸ் எல்லாம் வருது ? இது உனக்கு தெரியுமா தெரியாதா ? மறுபடி எதுக்குடி அவ வாழ்க்கையில குறுக்க போனார்? அவளை நிம்மதியாவே இருக்க விட மாட்டாரா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

" அம்மா கொஞ்சம் பேசாம இரு. எனக்கு தெரியும் .அவ என்கிட்ட சொல்லிட்டா.. அவ பேரன்ஸ்க்கு தெரிய வேண்டாம்னு சொன்னதால தான் நான் உங்க கிட்ட கூட சொல்லல... இப்படி மீடியா மோப்பம் புடிச்சு நியூஸ் போடுவாங்கன்னு நாங்க என்ன கணவா கண்டோம்.. இப்ப இது அங்கிருக்கும் ஆன்ட்டிக்கும் தெரிஞ்சா என்ன ஆகுமோ..." என்று முதலில் தாயிடம் கூறியவள் பின்பு அவர்களை நினைத்து கவலை கொண்டாள்.

உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now