உயிரை கொல்லுதே காதல் ❤️25

1.7K 42 5
                                    

‌        துரிதமாக நடந்தன ஹரியின் கல்யாண வேலைகள் .இத்தனை வேகத்தினை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை. எளிமையாக வீட்டிலேயே நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டனர். அதிசயம் என்னவென்றால் நிரோஷினியின் பெற்றோரை மனைவி மற்றும் மகளுடன் சென்று  முறையாக வரவேற்றான்.


        இது எதுவுமே நிரோஷினிக்கு தெரியாமலேயே செய்தான் எனலாம்.. திடீரென ஒருநாள் அவள்  முன் வந்தவன்
"ஒரு இடத்துக்கு போகணும். ஈவினிங் ரெடியா இரு .அப்புறம் பேபியையும் ரெடி பண்ணு .."என்று விட்டு அவன் சென்று விட்டான். இவள் தான் எங்கு செல்ல கூப்பிடுகிறான் என்று கூட தெரியாமல் மாலை நேரம் தர்ஷினி உடன் தயாராக நின்று இருந்தாள் அவன் வருகைக்காக.


      அன்று அவன் சொன்னது போல் வழமையை விட நேரமே ஆஃபீஸில் இருந்து வந்ததும் அவர்களை சற்று நேரம் பொறுக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்று தயாராக வந்தான். கார் நின்ற இடத்தை பார்த்தவள் உணர்ச்சி பொங்க அவனது முகத்தை திரும்பி பார்த்தாள்..

      ஆனால் அவனோ காரிலிருந்து இறங்கி அவள் பக்கம் வந்து கதவை திறந்தவன் தர்ஷினியை  தனது கையில் வாங்கிக் கொண்டு வா என்று அவளை பார்த்து தலையசைத்து விட்டு வீட்டு வாசலில் போய் நின்று விட்டான்..

      வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் வந்து இவர்களை பார்த்து விட்டு உள்ளே சென்று சுப்ரமணியம் மற்றும் அலமுவை அழைத்து வந்தாள்.
வெளியே வந்தவர்கள் கண்டதூ குடும்பத்துடன் நிற்கும் தன் மகளைத் தான் ..மனம் நிறைந்து தான் போனது அந்த பெரியவர்கள் இருவருக்கும் ..

     இன்று தான் எஸ்.கே  முதன் முதலாக வந்து இருப்பதை கண்டு முகம் மலர வரவேற்றனர்.. அவர்களுக்கு அவனை பிடிக்கவில்லை என்றாலும் அவர்களது ஒரே மகளுக்கு அவன் தானே உலகம் ..எனவே அவர்களும் அவனை அனுசரித்துச் செல்ல முடிவெடுத்து விட்டனர்.
" வாங்க மாப்பிள்ளை.. வாங்க நிரு.." நின்று வரவேற்றனர் முழு மனதோடு..


உயிரை கொல்லுதே காதல்....Where stories live. Discover now