மனமும் மணமும் உடைந்து சிதற
உயிரும் உடலும் உருக்குலைந்து
கூட முடியா உறவை நினைத்து
குவளை நிறைய கண்ணீர் வடித்து
தேற்ற முடியா தன்னிலை கண்டு
மீள இயலாமல் தவித்து வர
வாடி வதங்கிய வாழ்க்கையில் இனி வாழ பிடி என்னவென்று எண்ணி
அகமும் புறமும் அவனை கண்டு
அகல முடியாமல் அவனை நினைத்து
இருந்த இடத்தில் கதறி அழ,அம்மா!!!
என அழைத்தது அவள் உயிரின் குரல்.
இனி எஞ்சிய வாழ்வு தன் உயிருக்காய்!!!