நான் இங்க வந்து 2 டேஸ் ஆச்சு.. மார்னிங் எழுந்த உடனே ஜாலியா கார்டென்ல யோகா பண்ணிட்டு வீட்டுக்குள்ள போனேன்..
நந்து ஏதோ என் பக்கத்துல வந்து சொன்னா.. ஆனா என்னனு தான் சரியா புரியல.. என்னவா இருக்கும்னு யோசிச்சுட்டு வந்துட்டே இருந்தனா ராஜிவ் அண்ணா மேல மோதிட்டேன்..ஏய் குல்பீ உனக்கு கண்ணு தெரிலயானு கேட்டுட்டு அவர் பாட்டுக்கு போய்ட்டாரு.. அவர் அப்டிதான்.. எப்ப பாத்தாலும் பிஸி.. பிஸி..தான் ..
அப்பதான் மது எழுந்து வந்தா..நான் குட் மார்னிங்னு சொன்னேன்.. அதுக்கு ஈஈ னு பல்ல காமிச்சிட்டுக் காபி குடிக்க போய்ட்டா..
வீட்ல யாருமே இல்ல. நான், மது, நந்து.. அப்ரோம் நாலு குட்டி பசங்க மட்டும் தான் .. எல்லாரும் கோவிலுக்குப் போய்ட்டாங்க..
எனக்கு செம போராஹ் இருந்துச்சு.. வாடி நாமளும் போலாம்னு சொன்னா ஒருத்தியும் வர மாட்டீங்கிறாங்க..சரினு இந்த வாண்டுகளோட கண்ணாமூச்சியாது விளையாடுவோம்னு நினைச்சேன்..பரவால்ல.. அந்த குட்டிஸ்லாம் நான் கூப்பிட்ட உடனே வந்துட்டாங்க.. ஜாலி ஆஹ் இருந்துச்சு..
இப்ப நான் அவுட் ஆயிட்டேன்.. என்னோட கண்ணக்கட்டப் போரக்கு முன்னாடி நான் நந்துவை பார்த்தேன்..அவ என்ன வில்லங்கமா பாத்து சிரிச்சா. ஆனா என்னப் பண்ண போறான்னு தெரில..
எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா எல்லா ஸ்டெப்பும் எடுத்து வெச்சேன்..பட் நான் நினைச்ச மாறியே என் கால்ல ஆயில் மாறி ஏதோ பட்டுச்சு.. அடுத்த செகண்ட் பேலன்ஸ் மிஸ் ஆகி நான் கீழ விழுந்துட்டேன்..என்னால நகரக் கூட முடில..
கால்ல ரொம்ப வலி..அந்த குட்டிஸ்லாம் என்ன எழுப்ப ட்ரை பண்ணாங்க.. பட் என்னால முடில..
YOU ARE READING
தி கிரேஸி கேர்ள்
Non-Fictionநான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..