Marukkathe Nee Marakkathe Nee - 2

933 93 83
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ - 1
வானத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்த பின் மாலை பொழுது. பறவைகள் குரல் எழுப்பியபடி சிறகுகளை படபடத்தபடி சென்றன. காற்று நின்று போய் இறுக்கமாக இருந்தது. சம்யுக்தாவிற்கு தனது மனது அதை விட இறுக்கமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

"ஹாய் சம்யு" என குரல் கேட்டு திரும்பியவளின் முகம் மலர்ந்தது.

"ஹாய் ஸ்மிருதி" என்ற சம்யுக்தாவிடம், "என்ன சம்யு, உடனே வா என்று கால் செஞ்சே?" என கேட்டாள்.

"உன்னை பார்த்தே இரண்டு மாசமாயிருச்சு. எப்போ கூப்பிட்டாலும் பிஸியாக இருக்கே. அதனால் தான் உடனே உன்னை வர சொன்னேன்" என தோளைக் குலுக்கினாள்.

"ஒ, தாங்க் காட்" என சொன்னவள், பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் ஸ்மிருதி்.

அவள் அருகே அமர்ந்த சம்யுக்தா, "ஸாரி ஸ்மிருதி, இரண்டு வாரமா என்னை வீட்டில் ஆபிஸ் கூட போக விடலை. நேற்று தான் அமிதா அண்ணியோட வெளியே போனேன்" என சோர்வாக சொன்னாள்.

"ஏன் சம்யு?" என யோசனையுடன் அவளைப் பார்த்துக் கேட்டாள் ஸ்மிருதி.

"திரும்பவும் ஏதாவது அசம்பாவிதம் நடந்திடும் என்று பயப்படறாங்க" என கவலையாக சொன்னாள் சம்யுக்தா.

"கண்டிப்பாக கவலை இருக்க தானே செய்யும் சம்யு" என சொன்னவள், "எனக்கும் அதே பயம் தான். அதனால் தான் நானும் இரண்டு மாசம் இந்த பக்கமே வரலை. போன தடவை எங்கூட நீ வந்து தான் அந்த மாதிரி நடந்திடிச்சு" என வருத்தமாக சொன்னாள் ஸ்மிருதி.

"சரி விடு, அதுக்கு எந்த விதத்திலும் நீ காரணம் இல்லை. எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம்" என வெறுப்பாக சொன்னாள்.

"அப்போ நீ அவனை இன்னும் மறக்கலையா சம்யு?" என கேட்டாள் ஸ்மிருதி.

"மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள் சம்யுக்தா.

"இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும் சம்யு?" என கவலையுடன் கேட்டாள் ஸ்மிருதி.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now