மறக்காதே நீ மறுக்காதே நீ - 18
பன்னிரண்டாம் நாள்...காலை பத்து மணி..
"ஹாய் ஸ்ம்ரு" என உள்ளே வந்த யதுநந்தன் அடர்ந்த நீலத்தில் வெள்ளை கோடுகள் போட்ட டீ ஷர்ட் அணிந்திருந்தான்.
"ஹலோ" என அவனை நிமிர்ந்து பார்த்து சொன்ன ஸ்மிருதி, தனது எதிரே இருந்த இருக்கையை காட்டினாள்.
தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து இரண்டு டைரி மில்க் சாக்லேட் பாரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதை கையில் வாங்காமல் அவனையே கூர்மையாக பார்த்தாள்.
"சாக்லேட்ஸ்..." என சொன்னவனிடம், "எதுக்கு" என்ற நிதானமான குரலில் கேட்டாள்.
"நேத்து ஃபிளவர்ஸ் எடுத்திட்டு வந்தேன், இன்னிக்கு நீ சொல்ல போற ஸ்வீட் நியூஸ்ஸை செலிபரேட் செய்யறதுக்கு சம்திங் ஸ்வீட்" என தோளை குலுக்கினான்.
"நான் என்ன பதில் சொல்ல போறேனு உங்களுக்கு எப்படி தெரியும்?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
"உனக்கு என்னை பிடிக்கலைனா, உங்க ஆபிஸ் வாசலில் இருக்கிற செக்யூரிட்டியே என்னை திருப்பி அனுப்பிச்சியிருப்பான். உள்ளே வரும் போது ஃபிரண்ட் டெஸ்கில் இருந்த பொண்ணு, பிங்க் லிப்கிளாஸ் போட்ட்ருந்தாளே அவ பேரு என்ன? ஹம்ம் மேக்னா, அவ என்னை உள்ளே விட்டிருக்க மாட்டாள்" என் சாய்ந்து அமர்ந்தபடி சொன்னான்.
அவன் முகத்தை ஆராய்ந்தவள், "மிஸ்டர் யதுநந்தன், நீங்க பிரபோஸ் பண்ண விதம் பிடிச்சிருந்தது" என்றவளிடம், "என்னை எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும் ஸ்வீட்டி. நான் அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு இன்னிக்கு போக சொல்றேன்" என கண்கள் மின்ன சொன்னான்.
"ஸாரி, உங்க பிரபோஸ பண்ண ஸ்டைல் தான் பிடிச்சிருக்கு என்று சொன்னேன். பிரபோஸல் பிடிச்சிருக்கு என்று சொல்லலை" என ஆழ்ந்த குரலில் சொன்னாள்.
"என்னை ஏன் பிடிக்கலை ஸ்மிருதி. நல்லா படிச்சிருக்கேன், வொர்க் பண்ணறேன், உன்னை நல்லா வைச்சிக்கிற அளவு வசதியிருக்கு. எல்லாத்துக்கும் மேலே, ஐ லுக் ஹான்ட்சம். என்னை பிடிக்கலைங்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லுங்க" என அமர்த்தலாக சொன்னான்.
YOU ARE READING
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2