நறுமணம் 39

4.3K 195 45
                                    


முகி pov:

     காலையில அவனுக்காகவே நான் ரெடியாகிட்டு போனேன்....எதாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லுவான்னு பாத்தா சிம்புளா நல்லா இருக்குறன்னு சொன்னான்...அதுவும் என் முகத்தை பாத்து கூட சொல்லல...ஆனா அந்த ரேஷ்மா அவன ஃபார்மல்ஸ்ல நல்லா இருக்குறன்னு சொன்ன உடனே பல்ல காட்டிட்டே நீ கூட ரொம்ப நல்லா இருக்குற...இந்த ட்ரெஸ் நல்லா இருக்குதுன்னு சொல்றான்....அவளும் வெக்கமே இல்லாம அவன் கைய புடிச்சிக்கிட்டு இருக்குறா இவனும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தான்....என்னால அதை எல்லாம் பாத்துட்டு அமைதியா உக்கார முடியல....காலையிலையே காலேஜ்க்கு வந்த முதல் நாளே சண்டை போட வேண்டாம்னு நான் க்ளாஸ்க்கு போரேன்னு போய்ட்டேன்....

அங்க போனதும் நான் தனியா இருக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்....நான் அப்போ நிஷுவ ரொம்ப மிஸ் பண்ணேன்....அவ காலேஜ் திருப்பூர்ல ஜாய்ன் பண்ணிட்டா....சென்னையிலையே கிடைச்சிரும்னு பாத்தோம் பட் சீட் கிடைக்கல.....அவளுக்கு கால் பண்ணிட்டு பேசலாம்னு ஃபோன் எடுத்து கால் பண்ணேன்....

"ஹலோ முகி காலேஜ் போய்ட்டியா....எப்புடி இருக்குது உனக்கு புடிச்சிருக்குதா....ஃப்ரெண்ட்ஸ் யாராவது கிடைச்சாங்களா....."னு கேட்டா

நான் எதுவும் பேசல....என்னன்னு தெரியல அந்த டைம்ல அவள நான் ரொம்ப மிஸ் பண்ணதுனாலையோ என்னமோ கண்ணுல இருந்து கண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சு....

"மிஸ் யூ நிஷு.....நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குது...."னு சொன்னேன்

"ஏ லூசு....அழுகுறியா...."னு கேட்டா

"ம்ம்...."னு சொன்னேன்

"நானும் தான் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணுறேன்....லீவ் விட்டதும் நான் உடனே கிளம்பி வந்துடுறேன்.....அழாத முகி....நீ அழுது என்னையும் அழ வச்சிடாத....நான் என்னைய நானே கஷ்டப் பட்டு சமாதானம் பண்ணி வச்சிருக்குறேன்...."னு அவ சொன்னா

"சரி நான் அழுகல....எப்பவும் நீ என் பக்கத்துல இருப்பியா....இப்ப க்ளாஸ்ல நீ என் பக்கத்துல இல்லாம இருக்குறது என்னமோ தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீல்...."

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now