நறுமணம் 73

3.3K 174 24
                                    

சக்தி pov:

    நான் உக்கார்ந்து பேப்பர் பாத்துட்டு இருந்தேன்.....அப்போ அதுல அமைச்சர் பையன் கடத்தப்பட்டார்னு நியூஸ் கருந்துச்சு.....கரெக்டா அப்போ வீட்டுக்கு மத்திய அமைச்சரோட பீ.ஏ என்னைய பாக்கனும்னு சொன்னாருன்னு என்கிட்ட சொன்னான்....

"இங்க பாருங்க உங்க அமைச்சருக்கு வேணும்னா அவர வந்து பாக்க சொல்லுங்க....என்னால அவரு சொல்ற இடத்துக்கு எல்லாம் வர முடியாது...."னு சொல்லி விட்டுட்டேன்...

நான் கோபத்துல உக்காந்து இருந்தேன்....அந்த ஆளு தப்பானவன்னு தெரியும் அதோட அந்த ஆளுக்கு எதிரா க்ரிஷ் ஆஜராகிருக்குறான்னு தெரியும்....இவன் மாதிரி ஆளுங்களுக்கு வாதாடி தருறது பாவம்....

"என்னாச்சுங்க ஏன் ஒரு மாதிரி இருக்குறிங்க...."னு ஸ்வாத்தி என் தோல் மேல கை வச்சிட்டு கேட்டா...

"ஒன்னும் இல்ல டா....சின்ன கேஸ் விஷ்யமா யோசிச்சிட்டு இருந்தேன் அதான்...."

"எப்ப பாத்தாலும் கேஸ் நினைப்பு தானா....வர வர பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்டுல இருக்குறேன்றதையே மறந்திட்டிங்க போல...."

"ஏன்டி அப்புடி சொல்லுற....என்னதான் கேஸ் விஷ்யமா இருந்தாலும் உன்னைய நான் விட்டுக்குடுக்க மாட்டேன்...."

"எல்லாம் டைலாக் அடிங்க....அவ்வளோ அக்கரை இருந்தா இன்னைக்கு என்ன நாளுன்னு சொல்லுங்க...."

"இன்னைக்கு செவ்வாய்கிழமை...."

"ஐய்யோ ராமா இந்த மனுஷன கட்டிக்கிட்டு நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்...."

"ஏய் என்ன சொன்னா தான டி தெரியும்...."

"நீங்களும் எதுவும் சொல்ல வேண்டாம்....நானும் எதுவும் சொல்ல வேண்டாம்...."னு கோவமா சொல்லிட்டு போய்ட்டா...

அப்போ அங்க ப்ரவீன் வந்தான்....

"அண்ணி காஃபி...."னு சோஃபால உக்காந்துட்டே கத்துனான்

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now