எல்லோரும் காத்திருந்த திருமண நாள், நான்கு உள்ளங்களில் நிம்மதியும் சந்தோசமும் பரவ இப்படி ஒரு தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை கொடுத்ததற்கு எல்லோரும் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். கதிர் மட்டும் "வாட்பெட்டுக்கு" நன்றி சொல்லிக்கொண்டிருந்தான். பிங்க் நிற சேலையில் கொஞ்சம் குண்டான தேவதை என நந்தினி ஜொலிக்க வைத்த கண் வாங்காமல் ராஜீவ் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட ராகவி
"டேய் அண்ணா உன் வாட்டர்பால்ஸ மூடு. கல்யாணத்துக்கு வர்றவங்க வழுக்கி விழுந்துட போறாங்க" என்று கூறிய தன் தங்கையை அசடு வழிய பார்த்தவன்"ராகவி ரொம்ப தாங்க்ஸ்டா, எங்க கல்யாணம் நடக்க மிக முக்கிய காரணம் நீயும் நம்ம அக்காவும்தான். உங்கள மாதிரி சிஸ்டர்ஸ் கிடைச்சா எந்த பையனுக்கும் வாழ்க்கைல எப்படியான ப்ராப்ளம் வந்தாலும் ஈசியா சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்" என்றவனை புன்னகையுடன்
"டேய் போதும்டா யப்பா.இப்பவே இங்க இப்படி குளிருது இதுல நீ வேற ஐஸ் வைக்காத"என்று கூறியவள்
"அண்ணி செம்ம அழகா இருக்காங்கண்ணா.எனக்கே பொறாமையா இருக்கு. பெண்மையே பார்த்து பொறாமைப்படும் அழகுன்னு சொல்வாங்களே அது அண்ணிதான் போல" என்றவளை ராஜீவ்
"சரி சரி, போதும் என் செல்லத்த பார்த்து பொறாமை பட்டது" என்றவன் ஒயிலாக நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்த நந்தினிக்கு ராஜீவ் மூன்று முடிச்சுக்களுடன் தன் காதலையும் சேர்த்து கட்டினான்.
முதலிரவுக்கு நந்தினி தயாராகி அறைக்குள் செல்ல முற்பட அவளின் அருகில் வந்த ராஜீவின் தாய்
"அம்மா நந்தினி, உனக்கு இது முதல் இரவு இல்லைன்னாலும் என் பையனுக்கு இது முதல் இரவுமா.உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல.கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்க"என்று கூற நந்தினியின் முகம் கவலையில் சுருங்குவதை கண்ட ராஜீவின் அக்கா
"அம்மா உன்ன மாமா கூப்பிடுறாங்க என்னன்னு பாரு" என்று கூறியவள் தன் தாய் சென்றதும்
YOU ARE READING
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...