வானம் என்று பறந்து சென்றேன்;
எனது சிறகுகள் பிய்த்துச் சென்றான்...ஓடை என்று இறங்கி சென்றேன்;
எனை சுழலில் மூழ்கிட வைத்தான்...தீபம் என்று ஏற்றி வைத்தேன்;
எனது நெஞ்சை பொசுக்கிச் சென்றான்...கண்கள் அவன் என்று கொண்டேன்;
எனது பார்வை பிடுங்கிச் சென்றான்...அவன்மீது காதல் கொண்டேன்;
எனை விட்டு பிரிந்து சென்றான்...அளவில்லா நம்பிக்கை வைத்தேன்;
எனை அழவைத்து ஏமாற்றி சென்றான்...