பூமி தனக்குத் தானே சுழல்கிறது
ஏன் ?
இரவு பகலுக்காக !இரவு பகலாக நீ சுழல்கிறாய்
ஏன் ?
பொருளாதாரத்திற்காக !பொருளாதாரம் சமமாக சுழல்வதில்லை
ஏன் ?
அரசியல் சம நீரோடை வகுக்காததால் !பிச்சை ஓடேந்தி தெருவில் நிற்கிறான் மனிதன்
ஏன் ?
தருமம் தழைக்க உழைப்பைத் தியாகம் செய்த தியாகியவன் அதனால் ?பணத்தைப் பெற்று மக்கள் வாக்களிக்கிறார்கள்
ஏன் ?
கருப்பும் வெள்ளை ஆகட்டும் என்ற நல்லெண்ணத்தால் !
அல்லது
வரியாகப் போன பணம் கொள்ளையில் நிறம் மாறி
கொல்லையில் மாரியாகி வந்து பொழிவதாலோ !பணம் வழங்குவோர் ஆளும் கட்சிகளா எதிர் கட்சிகளா சுயேட்சைகளா
எவர் ஏன் ?
வழங்கும் வள்ளல்களை பேதம் பார்ப்பது ஏழு கண்டோர்க்கு அழகில்லை அன்றோ
தேர்தல் காலங்களில் வரும் எட்டன்றோ இவர் !நதி நீர் இணைப்புகள் நாட்டிற்கு நலனும் வளமும்
தரும் அன்றோ
நல்ல தலைவர்கள் நாட்டில் வந்து செயல்படும் வரை
இது தூரத்துத் தொடுவானம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகு !