உன்னை விடமாட்டேன் - 2
காலை உணவை முடித்தவுடன் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
லெட்சுமி திருமணமான புது தம்பதிகளை கோவிலுக்கு போய்வரும் படி கூறினார்.
நால்வரும் சரி என்றனர்.
தனம்: ஜீவா நீ பெரிய வண்டிய எடுத்துக்கோ. கதிர் நீ சின்ன வண்டிய... என்று முடிப்பதற்குள்
சட்டென முல்லை நாங்க பெரிய வண்டில போக போறோம்.
தனம்: எப்பவும் ஜீவா தான் பெரிய வண்டி எடுத்துட்டு போவான்.
முல்லை: ஏன் நாங்க எடுத்துட்டு போனா வண்டி ஓடாதா
கதிர்: முல்ல...
முல்லை: நா பெரிய வண்டில தான் வருவேன். நா போய் கோவிலுக்கு கிளம்புறேன்.நீயும் சீக்கிரம் வா என்றால் கதிரிடம்.
மீனாவும் ஜீவாவிடம் சண்டையிட்டால் பெரிய வண்டிகாக.
ஜீவா தன் தம்பி தன்னால் கஷ்டப்படுகிறான். அவனை மேலும் கஷ்டப்படடுத்த வேண்டாம் என கூறிவிட்டு சென்று விட்டான்.
மீனாவாள் அதற்கு மேல் பேச முடியவில்லை.
நால்வரும் கோவிலுக்கு செல்ல தயராகி வந்தனர். நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
கதிர் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு வேறெதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டான்.
தனம்: என்ன மாமா கதிர் எதுவும் பேசாம போரான். கடமைக்குனு போரான் மாமா. முல்லைய அவனுக்கு சுத்தமா பிடிக்காது. அவன் பாவம்
மூர்த்தி: அவசர படாத தனம் கொஞ்ச நாள் ஆகட்டும். அவன் சரியாகிடுவான்.
லெட்சுமி: தனம் உன் வேலைய பாரு. அவன் அவனோட வாழ்க்கைய பாத்துபான்.
KM இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். கோவில் வாசலில் பூக்கடையை பார்த்த முல்லை
முல்லை: கதிர் பூ வேணும்
கதிர்: வாங்கிகோ
வாங்கிய பூவை கதிரிடம் நீட்டி
முல்லை: வைச்சுவிடு