உன்னை விடமாட்டேன் - 7
முல்லை: கதிருக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை எல்லாம் நடக்குது.
லெட்சுமி: என்ன சொல்ற முல்ல
முல்லை: கதிரு நேத்தி வந்த நிலமை தெரியுமா உங்களுக்கு
லெட்சுமி: அய்யையோ.. என்ன ஆச்சு கதிரு
கதிர்: அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா
முல்லை: ஒன்னும் இல்லாம தான் night தூங்க முடியாம அவதிப்பட்டியா கதிரு
லெட்சுமி: என்னம்மா ஆச்சு சொல்லு முல்ல பயமா இருக்கு
முல்லை: தனியா மூட்டை தூக்கி முதுகெல்லாம் செவந்து..... வலியோட..... night முழுக்க தூங்க முடியாமா...... தவிச்சாரு....
என சொல்லும் போதே முல்லையின் கண்களில் அவளை மீறி கண்ணீரை வடித்தது.
லெட்சுமி: கண்ணீருடன் என்னம்மா சொல்ற.... கதிரு என்ன ஆச்சுடா.. இப்ப வலி பரவாயில்லையா
கதிர்: அதெல்லாம் சரியா போய்டுமா.. இப்ப ஒன்னும் இல்ல
முல்லை: ஒன்னும் இல்லையா இராத்திரி எவ்வளவு கஷ்டப்பட்ட கதிரு நீ
தனம்: என்ன கஷ்டப்பட்டானு சும்மா கத்திக்கிட்டு இருக்க.. இது அவன் எப்பவும் செய்ற வேலைத்தான்...
முல்லை: சும்மா கத்துறன😡
தனம்: மூட்டை தூக்குறது அவன் வேலை தானா
முல்லை: அது அவன் வேலை மட்டும் தானா?
தனம்: ஆமா.... அவன் வேலை மட்டும் தான்
முல்லை: இந்த வீட்ல மத்த ஆம்பிளைங்க இத செய்ய மாட்டாங்களா.
தனம்: மாமா ஏன் இதெல்லாம் செய்யனும்.. அவரு கஷ்டப்பட்டனும்னு அவருக்கு என்ன தலை எழுத்தா
முல்லை: என் புருஷன் மட்டும் கஷ்டப்படனும்னு இருக்கா
தனம்: இந்த வீட்ல அவன் தான் இத செய்வான்.
முல்லை: இனி செய்ய மாட்டான் என் புருஷன்
தனம்: அவன் செய்யலனா வேற யாரு செய்வா இத