உன்னை விடமாட்டேன் -3
முல்லை கதிரை அறைக்கு அழைத்து செல்ல அங்கு
கதிர்: அடியேய்....ஏன்டி இப்படி என் பாடா படுத்துற
முல்லை: நா உன்ன படுத்துறனா
நீ தான் 7 வருஷமா என்ன இப்படி படுத்துறகதிர்: எப்படி... இப்படி முத்தம் கொடுத்தா
முல்லை: அய்யடா.. நீயா... அதுவும்... முத்தம்
கதிர்: 😁
முல்லை: இழிக்காத
கதிர்: போடி.... நா கடைக்கு கிளம்புறேன்
முல்லை: போடா... எங்க போனாலும் இங்க தான் வரனும்.. இந்த முல்லை கிட்ட தான் வரனும் நீ
கதிர்: போடி... போடி... வாயாடி...
கதிர் கடைக்கு கிளம்பினான்.
அன்றைய இரவு உணவு உண்டபின் அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க மூர்த்தி கடை கணக்கு பார்த்து கொண்டிருந்தார்.
மூர்த்தி: ஜீவா கணக்குல ஒரு 2000 ஆயிரம் இடிக்குதுடா
ஜீவா: தெரியலையே அண்ணா. இன்னொரு முறை பாருங்க கணக்க
மூர்த்தி: சரியா பாத்துடேன் டா
தனம்: கதிரு நீ எதாவது பணம் எடுத்தியாடா
கதிர்: நா எடுக்கல அண்ணி
மூர்த்தி: அவன் சொல்லாம எடுக்க மாட்டான் தனம்
தனம்: அப்புறம் எப்படி மாமா பணம் குறையும்
ஜீவா: குடுங்கண்ணா நா பாக்குறேன்
ஜீவா கணக்கை பார்த்து விட்டு
ஜீவா: அண்ணா கந்தசாமிக்கு 4000 ரூபாய் குடுத்தோம். இதல 2000 ரூபாய்னு எழுதி இருக்கு அதான் இடிக்குது
மூர்த்தி: அப்படியா சரிடா. அத சரி பண்ணிடு
முல்லை: அத்த எனக்கு ஒரு சந்தேகம்
லெட்சுமி: என்னம்மா
முல்லை: எனக்கு எதாவது வேணும்னா நா யார்ட கேக்கனும்
லெட்சுமி: இது என்ன கேள்வி.. உன் புருஷன்ட தான்
முல்லை: எது கேட்டாலும் வாங்கி தருவாரா