திருமணம்

366 73 50
                                    

நீயும் நானும் - 18

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்....

தாமதத்திற்கு மன்னிக்கவும்...

முன்சுருக்கத்துடன் தொடங்குவோம் கதையை...

கதிரும் முல்லையும் கல்லூரி கால நண்பர்கள்...

நட்பு இருவருக்கும் காதலாக மலர்ந்தது..

வெற்றி வெண்ணிலா கதிரின் மாமன் பிள்ளைகள்...

வெண்ணிலா உடனான கதிரின் நட்பு எல்லோரும் அறிந்ததே...

வெண்ணிலாவின் காதல் காரணமாக எதிர்பாராமல் அவள் கருவுற்று விட...

வெண்ணிலாவின் காதலன் இறந்துவிட....

வெண்ணிலாவிற்கு வாழ்க்கை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டான் கதிர்..

முல்லையின் தோழி சரண்யா மூலம் கதிர் வெண்ணிலா திருமணத்தைப் பற்றி அறிந்த முல்லை மனவருத்தத்துடன் ஊரை விட்டு சென்று விட....

சில வருடங்களுக்குப் பிறகு தாயில்லாத பிள்ளை முல்லை தன் தந்தையுடன் மீண்டும் ஊர் திரும்புகிறாள்..

அரசு வேலை கிடைத்த முல்லை எல்லோரிடமும் அன்பாய் நடந்துக் கொள்ளும் ஆசிரியை...

அந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் ஆதவன் முல்லைக்கு மிகவும் நெருக்கமானான்..

முல்லையைப் போல ஆதவனும் தாயில்லாத பிள்ளை என்று அறிந்து கொண்ட முல்லை அதிக அளவிலான அன்பை அவனிடம் காட்டினாள்.

ஆதவன் முல்லையை தன் தாயைப் போலவே எண்ணிக் கொண்டிருந்தான்...

ஒரு நாள் பள்ளிக்கு வராத ஆதவனை காண முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவனது இருப்பிடம் அறிந்து அங்கு செல்கிறாள் முல்லை..

ஆதவன் வீட்டிற்கு சென்ற முல்லைக்கு காத்திருந்தது அதிர்ச்சி...

ஆதவனின்  தந்தை கதிர்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு கதிரும் முல்லையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றன...

நீயும் நானும்Where stories live. Discover now