காதலின் அடையாளம்

338 74 12
                                    

நீயும் நானும் - 22

கதிரும் முல்லையும் தங்கள் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தனர்..

அடுத்த இரண்டு நாட்கள் டெல்லியில் தங்களுக்கு பிடித்த இடங்களை சுற்றி பார்த்தனர்.....

இந்த இரண்டு நாட்களில் அவர்கள் வாழ்க்கையில் காதலும் காமமும் மட்டுமே நிறைந்திருந்தது...

வேறு எந்த எண்ண ஓட்டங்களும் மனதில் இல்லை...

தனக்கானவள் தன்னோடு இருக்கையில் வேற என்ன தோன்றும் அவன் மனதில்....

தன்னவன் கை கோர்த்து நடக்கும் போது தேவை இல்லா கற்பனைகள் அவளுக்கு ஏன் எழ வேண்டும்..

இருவரும் சென்னை திரும்பினர்...

அவர்களுக்கு முன்னதாகவே ஆதவனும் பாண்டியன் மற்றும் லட்சுமி வீட்டில் இருந்தனர்...

ஆதவன் : அம்மா....

முல்லை : என் செல்லக்குட்டி எப்ப வீட்டுக்கு வந்தீங்க

ஆதவன் : நாங்க காலையிலேயே வந்துட்டோம் மா.. நான் வந்ததும் உங்களை தான் தேடின தெரியுமா..

முல்லை : என் தங்க பட்டு அம்மாவ தேடுனீங்களாடி..

கதிர் : டேய் பொடி பயலே நான் ஒருத்தன் இங்க இருக்கேன்டா..

ஆதவன் : சாரிப்பா.. நான் உங்களை பார்க்கவே இல்லையே..

கதிர் : எது.. பாக்கலையா..

என்று கூறி ஆதவனின் இடையில் கிச்சு கிச்சு மூட்ட....

தன் உடலை நெளித்துக் கொண்டு கதிரின் மேல் ஒட்டிக் கொண்டான் ஆதவன்...

சிறிது நேர விசாரிப்புகளுக்கு பிறகு....

KM அறை.....

ஆதவன் : அம்மா டெல்லியில எல்லா இடத்தையும் சுத்தி பாத்தீங்களா

முல்லை : பாத்தோம்டா..

ஆதவன் : அப்பா வேலை பார்த்துட்டு இருந்தாங்களா... இல்ல உங்களை வெளியில கூட்டிட்டு போனாங்களா..

முல்லை மனதில் : நல்லாதான் வேல பாத்தாரு....

ஆதவன் : மா...

நீயும் நானும்Where stories live. Discover now