பயம்

293 67 22
                                    

நீயும் நானும் - 23

ஆதவன் : அப்பா...அப்பா....

கதிரும் வெற்றியும் ஆதவன் இருக்கும் இடம் நோக்கி ஓட...

அங்கே முல்லை தரையில் மயங்கி கிடக்க...

பதறிப் போன கதிர் முல்லையின் முகத்தில் தண்ணீரை தெளிக்க...

முல்லையோ கண் விழிக்காததால்...

முல்லையை தன் கைகளில் ஏந்தியவன்....

அவளை காரில் வைத்து அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று விட்டான்......

ஆதவன் : அம்மா.... என்னாச்சு... அப்பா.... எங்க போறாங்க... என அழ தொடங்கி விட்டான்..

மயங்கிய நிலையிலிருந்த முல்லையை கண்ட கதிரோ பதட்டத்தில் ஆதவனை மறந்து விட்டான்...

வெற்றி : அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல... அப்பா ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போய் இருக்காங்க வந்துடுவாங்க... கண்ணா நீ அழுகாத...

ஆதவன் : என்கிட்ட சொல்லாமலே போய்ட்டாங்க என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்ல..

வெற்றி : அம்மாவுக்கு உடம்பு சரியில்லல... அதனால அப்பா பயந்துட்டாங்க... இப்ப வந்துடுவாங்க...

வெற்றி மனதில் : உன்னோட மனைவிக்கு ஒன்னுனதும் என் தங்கச்சி மகனை மறந்துட்டல கதிரு....

ஆதவனை தூக்கிக்கொண்டு வெற்றி வீட்டு வாசலை நெருங்க அப்போதுதான் வெளியே சென்று இருந்த பாண்டியனும் லட்சுமியும் உள்ளே வருகின்றனர்..

பாண்டியன் : என்னப்பா வெற்றி? எங்க கிளம்பிட்ட..

வெற்றி : அது வீட்டுக்கு மாமா..

லெட்சுமி : குட்டி எங்க தூக்கிட்டு போற..

வெற்றி : என் கூட தான் வீட்டுக்கு

லெட்சுமி : அவன் அம்மா முல்லைய விட்டு இவன் வரமாட்டானே... அவளும் இவனை ஒரு நிமிஷம் யார்கிட்டயும் விட மாட்டாளே...

வெற்றி : ம்ம்...

லெட்சுமி : முல்ல.. என வீட்டினுள் வர

ஆதவன் : அம்மா இங்க இல்ல பாட்டி

பாண்டியன் : இல்லையா..

நீயும் நானும்Where stories live. Discover now