பகுதி 6

60 9 4
                                    

குறை ஒன்றும் இல்லை...

பகுதி 6

துர்வாவின் அறையில்.... ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதை பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார்.....

" ஏன் மா ரோஜா....நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே.... உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா...??" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து கொள்ள தன் சந்தேகங்களை கேள்வியாக கேட்டார்...

" என்னை திட்ட இந்த ஊருல யாரும் இல்ல தாத்தா... " என்று ரோஜா குழந்தையின் உறக்கம் கலைந்து விடாமல் பொறுமையாக பதில் சொன்னாள்...

ஒரு தட்டில் நான்கு கோப்பையுடன் துர்வா
" Ex Cuse Me " என்று கேட்டப்படி உள்ளே நுழைந்தவன்... ரோஜாவின் முன் தட்டை நீட்டினான்...

" வேணா துர்கா....நான் வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன்... நீங்க சாப்பிடுங்க... " என்று ரோஜா அந்த கோப்பையை வாங்க மறுக்க.....

" ரோஸ்... இது காபி தான்.... உனக்கு பிடிக்கும் தானே எடுத்துக்கோ.." என்று துர்வா சொன்னதும்.... அதற்கு மேல் அவன் உபசரிப்பை தவிர்க்க முடியாத நிலையில்.. துர்வா தந்த காபியை கையில் எடுத்து..
" நன்றி துர்கா " என்றாள்...

" திக்ஷி எழுந்ததும்... பால் கொடுக்கலாம்... தாத்தா நீங்க டீ எடுத்துக்கோங்க " என்று சொன்ன துர்வா தானும் ஒரு கோப்பையில் உள்ள காபியை அருந்தியப்படி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

" நேத்தே கேக்கணும்ன்னு நினைச்சேன்... நீ இங்க எந்த ஏரியால இருக்க....?? உன் கணவர் என்ன வேலை பாக்குறாரு....?? உனக்கு எத்தனை பசங்க...?? என்று துர்வாவின் தாத்தா தன் கேள்விகளை அடுக்க தொடங்கினார்....

கையில் இருந்த கோப்பையை மேசை மேல் வைத்த ரோஜா.... எந்த கேள்விக்கும் பதில் தராமல் அமைதியாக இருந்ததை பார்த்து... துர்வா வராத அழைப்பிற்கு பதில் தருவது போல தன் கைபேசியுடன் அறையை விட்டு வெளியே சென்றான்...

துர்வாவின் இந்த செயலை மதித்த ரோஜா.... துர்வாவின் தாத்தாவை பார்த்தவள்....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now