பகுதி 9

116 10 9
                                    

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 9

இரவு பத்து மணி அளவில் ரோஜா தன் மடியில் படுத்து இருக்கும் திக்ஷி பாப்பாவின் அழகை ரசித்தப்படி அமர்ந்து இருந்தாள்...

"இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இந்த குழந்தையை பார்த்துகிட்டு இருப்ப....உனக்கு தூக்கம் வரலையா"........
என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்டாள் கனகா....

"அதெல்லாம் வரல.....இந்த குழந்தை எவ்வளவு சமத்து பாத்திங்களா..... அடம் பிடிக்காம... இந்த வயசுலேயே பெரியவுங்கக்கிட்ட எல்லாம் மரியாதையா பேசி பழகுறாள்"...
என்று திக்ஷியின் செயல்களை நினைத்து ரோஜா மகிழ்ந்து கொண்டு இருந்தாள்...

"ரோஜா..... திக்ஷியின் அம்மா வளர்ப்பு அப்படி..... குழந்தையை அவ நல்லா பாத்துக்கிட்டாள் .... அன்று துர்வாவின் அண்ணனும் அண்ணியும் கோவிலுக்கு கிளம்பும் போது.... அவங்க தான் துர்வாவின் மனைவியையும் அவங்க கூட அழைச்சிட்டு போயிருக்காங்க.... ஆனா ஏதோ நல்ல நேரம்... குழந்தை துர்வா தாத்தாகிட்ட இருந்துகிட்டாள்...
பாவம்..அவங்க போன வண்டி தான் ACCIDENT ஆகி இப்போ மூன்று உசுரு அநியாயமா போயிடுது".... என்று கனகா கவலையாக சொன்னாள்....

"மரணம் நம்ம பக்கத்துல தான் கனகா இருக்கு...... முதல்ல நம்ம அதை தொடுவோமா.... இல்ல மரணம் நம்மை தொடுமா என்பது தான் வாழ்க்கையின் ரகசியம்"...என்று ரோஜா விரக்தியாக சொல்லி க்கொண்டு இருந்தாள்....

துர்வா வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டு கனகா கதவை திறந்தவள்....

"ஏன் டா... மணி என்னாகுது.... இவ்வளவு நேரமா நீ APPOINTMENT முடிக்க"... என்று கனகா துர்வாவை கடிந்து கொண்டாள்..

"SORRY கனகா..... போன இடத்துல LATE ஆகிடுதுங்க ......என்னால உங்க தூக்கம் வேற கெட்டு போச்சு போல..... சரி சரி நான் குழந்தையை தூக்கிகிட்டு கண் இமைக்கும் நேரத்துல பறந்து போயிடுறேன்....நீங்க கதவை LOCK பண்ணிக்கிட்டு தூங்குங்க"....
என்று சொல்லிக்கொண்டே துர்வா குழந்தை அருகில் வந்தான்....

"பாப்பா நல்லா தூங்கிகிட்டு இருக்காள் துர்கா.... அவ இன்னைக்கு இங்கேயே தூங்கட்டுமே.... நான் காலையில உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விடுறேனே".. என்று ரோஜா பாவமாக கேட்டாள்....

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now