பகுதி 7

70 12 6
                                    

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 7

நாட்கள் வேகமாக உருண்டோடியது......

துர்வாவின் தாத்தா சொன்னதை போல அவர் நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தை வெற்றி கரமாக கடந்து இருந்தாள் ரோஜா.....

இந்த ஒரு வார காலத்தில் கனகாவும் ரோஜாவும் உடன் பிறவா சகோதரிகளாக மாறி இருந்தனர்.....

தினமும் துர்வாவின் தாத்தா கைபேசி வாயிலாக ரோஜாவை அழைத்து, குழந்தை திக்ஷிதாவிடம் பேச வைப்பதை முதல் கடமையாக உணர்ந்தார்....

சாமியிடம் போய் இருக்கும் தன் அம்மாவின் வருகையை ரோஜா உருவத்தில் காண வார இறுதி வரை காத்து இருந்த திக்ஷிதாவின் எதிர்பார்ப்புக்குக்கு ஆனந்தம் தரும் வகையில் சனி கிழமை அன்று காலை ஏழு மணி அளவில் ரோஜா துர்வாவின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தாள்....

ரோஜாவை பார்த்த துர்வாவின் தாத்தாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி பெறுகியது....

" வாமா வாமா ரோஜா...உள்ள வா " என்று சிரித்த முகத்துடன் தாத்தா ரோஜாவை வரவேற்க....

புன்னகை மலர்ந்த முகத்துடன்...வாசலில் தன் காலணியை கழட்டி விட்டப்படி உள்ளே நுழைந்தாள் ரோஜா...

" என்ன மா நீ.... சொல்லி இருந்தா நான் கார் அனுப்பி இருப்பேனே.. ஆமா எதுல வந்த நீ " என்று தாத்தா கேக்க....

" பஸ்ல தாத்தா " என்று சொன்ன ரோஜாவின் கண்கள் குழந்தை திக்ஷிதாவை காண ஏங்கி இருந்தது..

" பாப்பா இன்னும் தூங்கிகிட்டு தான் மா இருக்காள்... நீ வேணா போய் ரூம்ல அவளை பாரு " என்று தாத்தா சொல்ல...

" நான் எப்படி தாத்தா.... இல்ல வேணா... குழந்தை எழும் வரை நான் இங்கேயே இருக்கேன் " என்று ரோஜா சொன்னாள் ..

" அட ஏன் மா... ரூம்ல துர்வா இருப்பான்னு நினைக்கிரியா.... அவன் ஜாக்கிங்க போய் இருக்கான்... குழந்தை தனியா தான் தூங்குறாள் " என்று தாத்தா சொல்லி முடிக்கும் காட்டிலும் ரோஜாவின் கால்கள் குழந்தை திக்ஷிதாவை நோக்கி ஓடியது .

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now