👩❤️💋👨இதயத்தில் இணைந்த இதழி 👩❤️💋👨
👄அத்தியாயம் 11/12
*****************************************
✍🏼நிகழ் காலம்...விக்னேஷ் - என்ன மா சித்து... யார் இவரு..... இந்த நேரத்துல இவரு ஏன் இங்க வந்தாரு ... என்று லோகேஷின் அண்ணன் மரியாதையுடன் இதழியை விசாரிக்க...
இதழி - விக்கி... இவரு...
என்று இவள் விஷயத்தை சொல்ல வரும் முன்பு.....லோகேஷ் - இவனை தான் இவ வச்சிருக்கா போல விக்கி... நல்ல வேள.. before mrge இவளோட நடத்தை என்னன்னு நமக்கு தெரிந்து போச்சு.... mom கிட்ட சொல்லி உடனே கல்யாணத்தை cancel பண்ண சொல்லு... ஏய் சித்து.... உனக்கு இவன்கூட மட்டும் தான் பழக்கம் இருக்கா.. இல்ல நீ abroad போனியே... அங்கேயும் இப்படி தான் எவன் கூடவாது படுத்து பிள்ளை....
என்று லோகேஷ் தன் வார்த்தையை முடிக்கும் காட்டிலும்.. லோகேஷின் கன்னத்தை இதழியின் கரங்கள் பதம் பார்க்க...
Hey.... எவ்ளோ திமிர் இருந்தால்.... எவனோ ஒருவன் கூட நைட்டு கூத்தடிச்சுகிட்டு... என்னன்னு கேக்க வந்த என்னையே அடிப்ப நீ.....இரு டி உன்னை...... என்றவன்..... பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் இதழியை அடிக்க கை ஓங்கியவன் கரங்களை தடுத்த விக்னேஷ்.....
ஏய் லோக்கி... என்ன இது... பொம்பள பிள்ளைங்க மேல எல்லாம் கை வைக்க கூடாது..... இங்க என்ன நடந்துச்சுன்னு சித்துக்கிட்ட கேக்காம... நீ இவள அசிங்கமா பேசுனது ரொம்ப தப்பு..... நீ முதல்ல வா.... நம்ம எதுவா இருந்தாலும் காலையில வந்து பேசிக்கலாம்..... சித்து.... நீ door லாக் பண்ணிக்கோ.... என்ற விக்னேஷ்....... தன் தம்பி லோகேஷின் கையை பிடித்து வெளியே அழைத்து செல்ல முயன்றவனின் கையை தட்டி விட்ட லோகேஷ்.... கடுங்கோபத்துடன்.... இதழியின் அருகில் சென்றவன்..... தன் எதிரில் நிற்கும் ஆறடிக்கும் மேல் இருந்த இதயகனியை பார்த்து முறைத்தவன்....மீண்டும் இதழியை பார்த்து கிண்டலாக சிரித்து......
ஒ..... உனக்கு இப்படி வெள்ளையா.... கட்டுமஸ்த்தான ஆம்பளைய தான் பிடிக்குமா.... இவன் எப்படி...இந்த ஊருல தான் உனக்கு பழக்கமா... இல்ல இவனை abroad ல இருந்தே அழைச்சிட்டு வந்துட்டியா.....எப்படி டி பாக்க நல்ல புள்ள மாதிரி இருந்துகிட்டு... நைட்டுல ஒருவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிற.... ச்சீ... நீயெல்லாம் என்னடி பொண்ணு.... என்ற லோகேஷின் வார்த்தை வரம்பு மீறுவதை கண்டு... ஆத்திரம் கொண்ட இதயக்கனி தன் இடது கையில் இருந்த காப்பை வலது கையால் முட்டி வரை இறுக்கியவன்.... லோகேஷின் அருகில் நெருங்குவதை பார்த்த இதழி இவர்கள் இடையில் சென்று நின்றவள்...