59 திருமணங்கள்
அமுதனும் தன்மயாவும் அரசவையை நோக்கி நடக்க துவங்கினார்கள்.
"தன்மயா, உனது கல்லூரியின் கால அட்டவணை அனைத்தும் உனக்கு நினைவிருப்பதாய் கூறினாயே... நீ தஞ்சைக்கு சுற்றுலா சென்றது போல், அடுத்த முறை எப்போது சென்றாய் என்று உனக்கு நினைவிருக்கிறதா?"
"இருக்கிறது... அடுத்த வெள்ளிக் கிழமையன்று மாமல்லபுரம் சென்றோம்... எனது பெற்றோரை இழந்த துயரத்தில் இருந்த என்னை, அங்கு வர விருப்பமில்லை என்று நான் கூறிய பிறகும், அங்கு சென்றால் நான் என் துயரை சற்று மறப்பேன் என்று அனைவரும் வலுக்கட்டாயமாய் அழைத்துச் சென்றார்கள்"
"பெற்றோரை இழந்த துயரை மறக்கும் அளவிற்கு அங்கு என்ன இருக்கிறது?"
"மாமல்லபுரம் ஒரு கலை கோவில்... ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள் அங்கு இருக்கின்றன..."
"ஏழாம் நூற்றாண்டு என்றால்?"
"இன்றிலிருந்து 500 அல்லது 600 ஆண்டுகளுக்குப் பிறகு, பேரரசர் மகேந்திரவர்ம பல்லவரால் அவை செதுக்கப்பட இருக்கின்றன...! அப்படிப்பட்ட நகரம் உருவாக காரணமாய் இருந்த யோசனையை வழங்கிய அவரது புதல்வர் நரசிம்ம வர்மனின் பெயரை அந்த நகரத்திற்கு அவர் சூட்டப் போகிறார்"
"ஆனால் நீ அதை மாமல்லபுரம் என்றாயே...!"
"ஆம், பாரத தேசத்தில் இருந்த சிறந்த மல்லர்களை எல்லாம் வீழ்த்தியவர் என்பதால், நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப்பெயர் கிடைத்தது"
"அவர் அவ்வளவு சிறந்த மல்லரோ?"
"மிகச்சிறந்த மல்லர் மட்டும் அல்ல... தன் தந்தையை அவமதித்த செயலுக்கு பழி தீர்க்க, காஞ்சிபுரத்திலிருந்து பல லட்சம் பேரை கொண்ட காலாட்படை குதிரைப் படை, யானைப் படையுடன் கூடிய மிகப்பெரிய படை ஒன்றை திரட்டி, நற்பத்தி ஐந்து காதங்களை கடந்து, சாளுக்கிய நாட்டிற்க்கே சென்று, அதன் மன்னனான இரண்டாம் புலிகேசியை வென்று, அவரது தலைநகரமான வாதாபியை தீக்கிரையாக்கி, அங்கு தனது வெற்றியை பறைசாற்றும் வெற்றி கம்பத்தை நட்டு, சரித்திரத்தில் அழியா புகழ் பெற்றவர்..."
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!