15

4.5K 168 6
                                    


    " ஹலோ!" "ஹலோ"

     லைன்ல மதன் கத்திட்டு இருந்தான்.

    " ஹே மதன்! நான் சாரதா பேசுறேன்.! "

    " நீயா ?? சொல்லு சாரா.." கொஞ்சம் சலிப்புடன்  தான் சொன்னான்.

    " வேற யாரையாச்சும் எதிர் பார்த்தியா என்ன??"

   " ம்ச்.. இப்படி மொக்கை போடுறதுக்குத்தான் கால் பண்ணியா சாரா??"

    பாவம். துயரத்தின் நுனியில இருக்கான் போல..

    " ஹே லூசு.. ஏன் இவ்ளோ சோகமா பேசுற??தூங்கலையா??"

    " இல்ல மதி... ம்ச் சாரி சாரா"

    " எப்பபார்த்தாலும் அவ நினைப்பாவேவாடா இருப்ப??"

    " என்ன பண்ணுறது சாரா!! லவ் பண்றதோட வேதனை உனக்கு புரியாது.. அதும் ஒன் சைடு.. "

     எனக்கு தெரியாதா??
எட்டு வருஷம்..

எட்டு வருஷம் .. நான் பட்ட அவஸ்தை அந்த சாமிக்குக்கூட தெரியுமான்னு எனக்கு தெரில..

   ஹா ! ஹா!!!

    " என்ன சாரா சிரிக்கிற??என் நிலைமைய பார்த்தா சிரிப்பா வருதுல உனக்கு."

    " டேய்...முதல்ல இப்படி பேசுறத நிப்பாட்டு.. ஒரே ஒரு உண்மேய சொல்லட்டா?? நீ ஒரு மிகப்பெரிய கேனை!!"

     " சாரா!!!!...." கத்துனான்..

      " டென்ஷனாகாம.. முதல்ல கேளு..உன்ன லக்கின்னு சொல்லுறதா?? இல்ல அன்லக்கின்னு சொல்லுறதான்னு தெரில மதன்.."

    " சாரதா! எனக்கு டென்ஷன் ஏத்தாத.. "

    மதி கூட அடிக்கடி என்ன திட்டுவா.. டைரக்டா பேசுன்னு..
இதுக்குமேல அவன கடுப்பேத்தகூடாது..

    " பின்ன என்ன டா?? அவளே வந்து ரெண்டு நாள் மூன்னாடி காலைல பைக்ல கூட்டிட்டு போக சொன்னாலாம்ல.. இவரு பெரிய நல்லவர். வேலை இருக்குன்னு சொன்னியாமா??"

    " மதி சொன்னாலா?? ....டக்குன்னு கேட்டதும் எனக்கு பயமா இருந்துச்சு . அதான் அப்படி சொன்னேன்"- மதன்.

    " அவ சொன்னதும் கரக்டு தான்.."

   " என்ன சொன்னா சாரா??"

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now