மணி 10..
"என்ன மதன்??"-நான்
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன்"
"சொல்லு டா"
"இந்தா இத கொண்டு போய் மதி கிட்ட குடு"
ஒரு செல்ஃபோன் குடுத்தான்.
"என்னது இது??"
"அவகிட்ட பேசுறதுக்கு.. இதுல என்னோட பழைய சிம்மும் இருக்கு.. அவகிட்ட குடுத்து ஃப்ரீயா இருக்கப்பலாம் ஃபோன் பண்ண சொன்னேன்னு சொல்லு"
"என்ன உன் ஆளுகிட்ட ஒரு நாள் கூட பேசாம இருக்க முடிலையா??"
அப்புறம் கிளம்பலாம்னு சொன்னப்ப.. எனக்கு பயம் தொத்திகிச்சு.
"மதன்.... "
"சொல்லு சாரா.. "
"ம்ம்.. அஅ.."
"என்ன பாட்டுகிளாஸ் எதும் போறியா??"
"கிண்டல் பண்ணாத எருமை!! உன்கிட்ட ஒன்னு சொல்லனும்??"
"சொல்லு.. வண்டியில போய்கிட்ட சொல்லலாமா??"
"வெயிட்.. இப்பவே சொல்லிர்றேன். சூர்யா என்ன லவ் பண்றதா சொல்றாரு."
"யாரு சூர்.. ஓஓஓ அந்த முதலாளி பார்டியா??"
"ம்ம். ஆமா.. "- நான்
"பிடிக்கலன்னு சொல்லிரு"-மதன்
"மதன்.. எனக்கு அவர பிடிக்கும் எனக்காக நிறைய செய்றாரு. ஆனா.. அவங்க வீட்டுல ஒத்துக்கமாட்டாங்க . என்னால அவர்கிட்ட பிடிக்கலன்னு கூட சொல்ல முடில. அதனால எனக்காக அவர்கிட்ட நீயே சொல்றியா?? என்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு"
"இந்த வேளைக்கு மட்டும் அண்ணன கூப்பிடாத. லவ்ல நமக்கு பிடிச்சிருந்தாலும் நாம தான் சொல்லனும், பிடிக்கலனாலும் நாம தான் சொல்லனும். "
இவன் ஒருத்தன்.. ம்ச்.
"உன்ட்ட கேட்டேன் பாரு.. நானே பாத்துக்குறேன். அது வரைக்கும் மதி கிட்ட மட்டும் சொல்லிடாதடா ப்ளீஸ்ஸ்.. "- நான்.
"பார்ப்போம்.. பட் அவன் என்ன சொன்னான்னு என்கிட்ட வந்து சொல்லு!"
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...