3

1.8K 129 242
                                    

மூர்த்தி அந்த கதையை கூற ஆரம்பித்த வேளையில் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய் "தம்பி நான் அந்த கதையை உங்களுக்கு சாயந்தரம் வந்து சொல்றேன் .இப்போ அய்யா என்னை தென்னைமண்டிக்கு போய் அதோட வரவு செலவு கணக்கை எடுத்துட்டு வர சொன்னாரு.உங்க எல்லாருக்கும் டீ கொடுத்துட்டு அப்புறம் அங்க போகலாம்னு வந்தேன்.இப்பொ போகலைன்னா லேட் ஆகிடும் தம்பி.அதனால நான் இப்போ கிளம்பறேன் "என சொல்லி அங்கிருந்து வெளியேற எத்தனித்தார்.

        “ மூர்த்தி  … சொல்லிட்டு போங்களேன் … அவ்ளோ நேரமா ஆகிடப்போகுது இந்த விஷயத்தை சொல்ல”

        “ அப்படி இல்ல தம்பி  அந்த கதையை விட இப்ப தென்னைமண்டி வரவு செலவு கணக்குதான் முக்கியம்… இப்ப மட்டும் நான் அதை எடுத்துட்டு போகலைன்னா ஐயா என்னை வகுந்து எடுத்துருவாரு… கண்டிப்பா சாயந்தரம் வந்து நான் உங்களுக்கு நான் சொல்றேன் “ என்றவர் அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

"ஹ்ம்ம் அப்போ ஈவ்னிங் வரையும் வெய்ட் பண்ணனுமா!? சந்தோஷம் ....... என சலித்துக்கொண்டே தனக்குள் சொல்லிக்கொண்டான்.இவர் கொடுத்த பில்டப்ப பார்த்தாலே இன்ட்ரஸ்ட் தாறுமாறா ஏறுது......அன்ட் அந்த குன்றை பார்த்த உடனே ஏன் எனக்கு ஏதோ டிஃப்ரண்ட் ஃபீல் ஆகுது.அதைப்பற்றி பேசினால் நான் ரொம்ப ஆர்வமாகிட்றேன்.அப்படி என்னதான் இருக்கு அங்கே!!!!? என நினைக்க ஆரம்பித்தான்.

பிறகு பாலாவைப் பார்ப்பதற்க்காக பாலாவின் அறைக்கு சென்றான் விஷ்ணு. இப்போ எப்படிடா இருக்கு . உனக்கு வலி அதிகமாக இருக்கா?! என கேட்டான். டேய் மச்சி அப்படி ஒன்னும் பெரிய அடி இல்லைடா .....ஆஸ் எ டாக்டரா இதுக்கே இப்படி பயந்துட்டா எப்படி!? ஆனாலும் ரொம்ப பாசக்கார நண்பன்டா நீ!. " என சிரித்துக்கொண்டே கூறினான்.

"ஏன்டா சொல்லமாட்ட உனக்கு அடிபட்ட உடனே நாங்க எப்படி பயந்தோம்னு எங்களுக்குத்தான் தெரியும்.எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுச்சுடா!." என கூறிக்கொண்டே அவனை முறைத்தான்.

அது மட்டும் ரகசியம்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon