22

1.2K 52 35
                                    

ஆதித்தன்  தன் இருப்பினை  உலகறியச்செய்யும்  அந்த ரம்மியமான அதிகாலைப்பொழுதானது திருவிழாவிற்கான  பரபரப்புடன் விடையூரில்  புலர ஆரம்பித்தது . 

            பெரிய  பெரிய  ராட்டினங்களும் , பல புத்தம் புதிய  பொம்மைக்கடைகளும்,விளையாட்டுப் பொருட்களும்  சிறார்களை  பரவசத்தில்  ஆழ்த்த   இளைஞர்களையும்  பெண்களையும்  கவரும்  பல  கேளிக்கை  நிகழ்ச்சிகளும்,நடன நிகழ்ச்சிளும்  புதுப்பொலிவுடன்  நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

                

        ராம்  திருவிழாவிற்கான  வேளைகளை கர்மசிரத்தையுடன்  மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்க  விஷ்ணு , ஜீவா , பாலா,ராஜீவ் ஆகியோர்  சிறிது  நேரம்  ராம்முக்கு உதவி செய்வதும் சிறிது நேரம்  திருவிழா கேளிக்கைகளை கண்டுகளிப்பதுமாக  மகிழ்ச்சியுடன் வளையவந்துகொண்டிருந்னர். ராஜீவ்வும் அவர்களின் நண்பர் கூட்டனியில் ஒரு உறுப்பினர் ஆகியிருந்தான்.

         இதுவரை  கிராமத்து  திருவிழாவினை திரைப்படங்கள் மற்றும்  கதைகளின் வாயிலாக  மட்டுமே கண்ணுற்று  வந்த  மூவருக்கும்  இது  பல வித்தியாச பரவச அனுபவங்களை  ஈட்டித்தந்து  கொண்டிருந்தது .  ஒவ்வொரு நொடிகளையும் அவர்கள் தங்களின் மனப்பெட்டகத்தினுள்  பொக்கிஷமாக பாவித்து சேகரித்துக்கொண்டிருந்தனர் . 

         கௌரியுடன்  நின்றுகொண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளைக்  கண்டுகொண்டிருந்த   வேதா   பட்டுவேட்டி  சட்டையுடனும்  சிறிது  சந்தனக்கீற்றை தன் நெற்றியிலும் இட்டுக்கொண்டு  காற்றில்  அலைபாய்ந்த  கேசத்தை  தன்  கைவிரல்களால்  மொத்தமாகக்  கோதிக்கொண்டு  கம்பீரநடையுடன்  வந்துகொண்டிருந்த  விஷ்ணுவைக்  கண்டதும்  இவன்  தன்னவன்  என்ற எண்ணம் தலைதூக்க அவனின்  இலட்சனமான அழகில்  சுற்றம் மறந்து போய்  சற்றுநேரம் அப்படியே அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் . ( அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால் அநியாயத்துக்கு சைட் அடிச்சிட்டு  இருந்தா 😅😅😅😅😅 ) 

அது மட்டும் ரகசியம்Where stories live. Discover now